Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2450 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2450நான்முகன் திருவந்தாதி || செவிக்கு இனிதாய் இருப்பதும் திரு நாமம் சொன்னார் பக்கல் உள்ள வாத்சல்யத்தாலே சிவந்த திருக் கண்களை யுடையனாய்-வ்யாமுக்தனாய் இருக்கிறவனுடைய திரு நாமம் பூமியில் உள்ளாருக்கும் நிலமதுவே கிடிகோள்- கவி பாடுகைக்கு ஸ்வரூப ரூப குணங்களால் குறைவற்று நின்றவனை யாத்ருச்சி கமாக லபித்தேன் – 69
செவிக்கின்பம் ஆவதுவும் செங்கண்மால் நாமம்,
புவிக்கும் புவியதுவே கண்டீர்,- கவிக்கு
நிறைபொருளாய் நின்றானை நேர்பட்டேன், பார்க்கில்
மறைப்பொருளும் அத்தனையே தான்.
செவிக்கு இன்பம் ஆவதுவும்,Sevikku Inbam Aavadhuvum - கர்ணாமிருதமாயிருப்பதும்
செம் கண்மால் நாமம்,Sem Kanmaal Naamam - புண்டரீகாக்ஷனான எம்பெருமானுடைய திருநாமமே
புவிக்கு,Bhuvikku - பூமியிலுள்ள ரெல்லார்க்கும்
புவியும் அதுவே,Bhuviyum Adhuvae - (நிழல்பெற ஒதுங்குவதற்கு) இடமாவதும் அத்திருநாமமே
கவிக்கு நிறைபொருள் ஆய்நின்றானே,Kavikku Niraiporul Aayninraan - பாசுரத்திற்கு நிறைந்த பொருளாயிருக்குமெம் பெருமானை
நேர்பட்டேன்,Nerpatten - தெய்வாதீனமாக அடையப்பெற்றேன்,
பார்க்கில்,Paarkkil - ஆராய்ந்து பார்த்தால்
மறை பொருளும் அத்தனையே தான்,Marai Porulum Aththanaiye Thaan - வேதங்களில் தேர்ந்த பொருளும் அவ்வளவே.