| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2451 | நான்முகன் திருவந்தாதி || இஜ் ஜகத்துக்கு ஸ்ரீ எம்பெருமான் ரஷகன் என்னும் இடம் சகல லோகங்களும் அறியும் என்கிறார்- கவிக்கு நிறைபொருளாய் நின்றபடியைச் சொல்லுகிறார் ஆகவுமாம்- வேதாந்த ரகசியம் இது என்று இருந்தபடி-எங்கனே என்னில் நான் ஒருத்தனும் இன்றாக அறிந்ததோ பிரசித்தம் அன்றோ -என்கிறார் – 70 | தானொருவ நாகித் தரணி யிடந்தெடுத்து, ஏனொருவ னாயெயிற்றில் தாங்கியதும் – யானொருவன் இன்றா வறிகின்றே னல்லேன், இருநிலத்தைச் சென்றாங் கடிப்படுத்த சேய். | தான் ஒருவன் ஆகி,Thaan Oruvan Aagi - (விஷ்ணுவாகிய) தான் ஒப்பற்ற ஸர்வேச்வரனாயிருந்து சென்று,Sendru - (மஹாபலியி னிடத்தில் யாசகனாய்ச்) சென்று ஆங்கு,Aangu - அந்த மாவலியின் யாக பூமியிலே இரு நிலத்தை,Iru Nilaththai - விசாலமான இந்நிலத்தை அடிப்படுத்த,Adipadaiththa - திருவடியினளவாக ஆக்கிக் டிகாண்ட (அளந்து கொண்ட) சேய்,Sey - சிறுபிள்ளையானவன் ஏன் ஒருவன் ஆய்,Yen Oruvan Aay - விலக்ஷண வராஹ ரூபியாய் தரணி,Tharani - பூமியை இடந்து அடுத்து,Idandhu Aduthu - (அண்டபித்தியில் நின்றும்) ஒட்டுவிடுவித்தெடுத்து எயிற்றில்,Eiyittril - (தனது) கோரைப் பல்லின்மீது தாங்கியது,Thangiyathu - தரித்தமையை யான் ஒருவன்,Yaan Oruvan - நானொருவன் மாத்திரம் இன்றா,Inndraa - இன்றாக அறிகின்றேன் அல்லேன்,Arikkinren Alleen - அறிகிறேனில்லை. (நெடுநாளாகவே அனைவருமறிவர்) |