Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2451 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2451நான்முகன் திருவந்தாதி || இஜ் ஜகத்துக்கு ஸ்ரீ எம்பெருமான் ரஷகன் என்னும் இடம் சகல லோகங்களும் அறியும் என்கிறார்- கவிக்கு நிறைபொருளாய் நின்றபடியைச் சொல்லுகிறார் ஆகவுமாம்- வேதாந்த ரகசியம் இது என்று இருந்தபடி-எங்கனே என்னில் நான் ஒருத்தனும் இன்றாக அறிந்ததோ பிரசித்தம் அன்றோ -என்கிறார் – 70
தானொருவ நாகித் தரணி யிடந்தெடுத்து,
ஏனொருவ னாயெயிற்றில் தாங்கியதும் – யானொருவன்
இன்றா வறிகின்றே னல்லேன், இருநிலத்தைச்
சென்றாங் கடிப்படுத்த சேய்.
தான் ஒருவன் ஆகி,Thaan Oruvan Aagi - (விஷ்ணுவாகிய) தான் ஒப்பற்ற ஸர்வேச்வரனாயிருந்து
சென்று,Sendru - (மஹாபலியி னிடத்தில் யாசகனாய்ச்) சென்று
ஆங்கு,Aangu - அந்த மாவலியின் யாக பூமியிலே
இரு நிலத்தை,Iru Nilaththai - விசாலமான இந்நிலத்தை
அடிப்படுத்த,Adipadaiththa - திருவடியினளவாக ஆக்கிக் டிகாண்ட (அளந்து கொண்ட)
சேய்,Sey - சிறுபிள்ளையானவன்
ஏன் ஒருவன் ஆய்,Yen Oruvan Aay - விலக்ஷண வராஹ ரூபியாய்
தரணி,Tharani - பூமியை
இடந்து அடுத்து,Idandhu Aduthu - (அண்டபித்தியில் நின்றும்) ஒட்டுவிடுவித்தெடுத்து
எயிற்றில்,Eiyittril - (தனது) கோரைப் பல்லின்மீது
தாங்கியது,Thangiyathu - தரித்தமையை
யான் ஒருவன்,Yaan Oruvan - நானொருவன் மாத்திரம்
இன்றா,Inndraa - இன்றாக
அறிகின்றேன் அல்லேன்,Arikkinren Alleen - அறிகிறேனில்லை. (நெடுநாளாகவே அனைவருமறிவர்)