| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2452 | நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ எம்பெருமான் தன்னை ஆஸ்ரயிக்கைக்கு உபாயமாக அருளிச் செய்த ஸ்ரீ கீதையை அறிவு கேட்டாலே அப்யசிப்பார் இல்லை -என்கிறார்- பிரளயம் கொண்ட பூமியை எடுத்து ரஷித்தது அறியாது இருந்த அளவேயோ – சம்சார பிரளயத்தில் நின்றும் எடுக்க அவன் அருளிச் செய்த வார்த்தையைத் தான் அறியப் போமோ -என்கிறார் 71 | சேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன், ஆயன் துவரைக்கோ னாய்நின்ற- மாயன்,அன் றோதிய வாக்கதனைக் கல்லார், உலகத்தில் ஏதிலராய் மெய்ஞ்ஞான மில். | சிறியன்,Siriyan - (ஸ்ரீகிருஷ்ணனென்கிற) சிறு பிள்ளையாய்க் கொண்டு அணியன்,Aniyan - ஸுலபனாயும் மிக பெரியன்,Miga Periyan - (அந்நிலையிலேயே) மிகவும் பெரியவனாய்க்கொண்டு சேயன்,Seyyan - எட்டாதவனாயும் (இவ்விரண்டு படிகளுக்கும் உதாரணமாக) ஆயன் ஆய் நின்ற,Aayan Aay Nindra - இடைப்பிள்ளையாய்ப் பிறந்த சிறுமையையுடையனாயும் துவரை கோன் ஆய்நின்ற,Thurai Kon Aay Nindra - த்வாரகாபுரிக்குத் தலைவனாய் நின்ற பெரு மேன்மையை யுடையவனாயு மிகுந்த மாயன்,Maayan - எம்பெருமான் அன்று,Andru - (பாரதயுத்தம் நடந்த) அக்காலத்தில் ஓதிய,Othiya - (திருத்தேர்த்தட்டில் அர்ஜுநனைக் குறித்து) அருளிச்செய்த வாக்கு அதனை,Vaakku Adhanai - (சரமச்லோகமாகிய) அந்தத் திரு வாக்கை கல்லார்,Kallaar - அதிகரிக்கப் பெறாதவர்கள் மெய் ஞானம் இல்,Mei Gyaanam Il - தத்துவவுணர்ச்சி யற்ற ஏதிலர் ஆம்,Aedhilar Aam - பகவத் விரோதிகளாவர். |