Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2452 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2452நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ எம்பெருமான் தன்னை ஆஸ்ரயிக்கைக்கு உபாயமாக அருளிச் செய்த ஸ்ரீ கீதையை அறிவு கேட்டாலே அப்யசிப்பார் இல்லை -என்கிறார்- பிரளயம் கொண்ட பூமியை எடுத்து ரஷித்தது அறியாது இருந்த அளவேயோ – சம்சார பிரளயத்தில் நின்றும் எடுக்க அவன் அருளிச் செய்த வார்த்தையைத் தான் அறியப் போமோ -என்கிறார் 71
சேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன்,
ஆயன் துவரைக்கோ னாய்நின்ற- மாயன்,அன்
றோதிய வாக்கதனைக் கல்லார், உலகத்தில்
ஏதிலராய் மெய்ஞ்ஞான மில்.
சிறியன்,Siriyan - (ஸ்ரீகிருஷ்ணனென்கிற) சிறு பிள்ளையாய்க் கொண்டு
அணியன்,Aniyan - ஸுலபனாயும்
மிக பெரியன்,Miga Periyan - (அந்நிலையிலேயே) மிகவும் பெரியவனாய்க்கொண்டு
சேயன்,Seyyan - எட்டாதவனாயும் (இவ்விரண்டு படிகளுக்கும் உதாரணமாக)
ஆயன் ஆய் நின்ற,Aayan Aay Nindra - இடைப்பிள்ளையாய்ப் பிறந்த சிறுமையையுடையனாயும்
துவரை கோன் ஆய்நின்ற,Thurai Kon Aay Nindra - த்வாரகாபுரிக்குத் தலைவனாய் நின்ற பெரு மேன்மையை யுடையவனாயு மிகுந்த
மாயன்,Maayan - எம்பெருமான்
அன்று,Andru - (பாரதயுத்தம் நடந்த) அக்காலத்தில்
ஓதிய,Othiya - (திருத்தேர்த்தட்டில் அர்ஜுநனைக் குறித்து) அருளிச்செய்த
வாக்கு அதனை,Vaakku Adhanai - (சரமச்லோகமாகிய) அந்தத் திரு வாக்கை
கல்லார்,Kallaar - அதிகரிக்கப் பெறாதவர்கள்
மெய் ஞானம் இல்,Mei Gyaanam Il - தத்துவவுணர்ச்சி யற்ற
ஏதிலர் ஆம்,Aedhilar Aam - பகவத் விரோதிகளாவர்.