| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2453 | நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ கீதையில் அருளிச் செய்த படி அவனே பிராப்யமும் ப்ராபகமும் – இவ் வர்த்தத்தை அன்று என்ன வல்லார் ஆர் என்கிறார் – நீர் ஓதினீர் ஆகில் இதுக்குப் பொருள் சொல்லும் என்னச் சொல்லுகிறார் –என்றுமாம்- 72 | இல்லறம் இல்லேல் துறவறமில் என்னும், சொல்லற மல்லனவும் சொல்லல்ல – நல்லறம் ஆவனவும் நால்வேத மாத்தவமும், நாரணனே யாவதீ தன்றென்பா ரார். | இல்லறம் என்னும் சொல்லும்,Illaram Ennum Sollum - க்ருஹஸ்த தர்மமாக சாஸ்த்ரஜித்தமான கர்மயோகம் தஞ்சமென்று சொல்லுகிற பிரமாணங்களும் (- (முக்திமார்க்கம் தெரியாமல் ஸம்ஸாரத்தில் உழல்கின்ற ஆத்மாக்களுக்கு)) சொல் அல்ல,Sol Allen - பிரமாணமல்ல இல்லேல்,Illeel - அங்ஙனன்றிக்கே, துறவறம் என்னும் சொல்லும்,Thuravaram Ennum Sollum - ஜ்ஞாநயோகம் தஞ்சமென்று சொல்லுகிற பிரமாணங்களும் சொல் அல்ல,Sol Allen - பிரமாணமல்ல இல்லேல்,Illeel - அங்ஙனுமன்றிக்கே அல்லன அறம் என்னும் சொல்,Allana Aram Ennum Sol - (பக்தியோகம் தேசவாஸம் திருநாம ஸங்கீர்த்தனம் முதலான) மற்ற உபாயங்கள் தஞ்சமென்று சொல்லுகிற பிரமாணங்களும் சொல் அல்ல,Sol Allen - பிரமாணமல்ல நல் அளம் ஆவனவும்,Nal Alam Aavavanum - நல்ல தருமங்களாகிய திருநாம ஸங்கீர்த்தநாதிகளும் நால் வேதம் மா தவமும்,Naal Vedam Maa Thavavum - நான்கு வேதங்களிலும் பிரதிபாதிக்கப்பட்ட பெரிய கருமங்களுமெல்லாம் நாரணனே ஆவது,Naaranane Aavathu - ஸ்ரீமந்நாராயணனுடைய அநுக்ரஹத்தாலே பயனளிப்பன வாகின்றன. ஈது,Eethu - இவ்வுண்மையை அன்று என்பார் அது,Andru Enbar Adhu - மறுப்பாருண்டோ? (இவ்வுலகம் அனைராலும் அங்கீகரிக்கத்தக்கது. |