திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2454 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2454நான்முகன் திருவந்தாதி || அவன் அருளிச் செய்த அர்த்தம் ப்ரஹ்மாதிகளுக்கும் நிலம் அன்று – வேறே சிலர் அறிகைக்கு உபாயம் உண்டோ -என்கிறார்- அவன் என்றும் உண்டாக்கி வைத்த ஸ்ரீ பரம பதத்தை-நீல கண்டன்-அஷ்ட நேத்திரன் ஆன ப்ரஹ்மா- என்கிறவர்களால் காணப் போகாது ஸ்ரீ க்ருஷ்ணம் தர்மம் சனாதனம் -என்கிறவன்-உபாய பாவம் இவர்களால் அறியப் போகாது என்றுமாம்- 73
ஆரே யறிவார் அனைத்துலகு முண்டுமிழ்ந்த, பேராழி யான்றன் பெருமையை,- கார்செறிந்த கண்டத்தான் எண்கண்ணான் காணான், அவன்வைத்த பண்டைத்தா னத்தின் பதி.
பதவுரை Show / Hide
அனைத்து உலகும்,Anaiththu Ulagum - எல்லா வுலகங்களையும்
உண்டு உமிழ்ந்த,Undu Umizhndha - (பிரளயத்தில்) உண்பதும் (பிறகு) உமிழ்வதும் செய்தவனும்
பேர் ஆழியான்தன்,Per Aazhiyaanthan - பெருமைதங்கிய திருவாழியாழ்வானைத் திருக்கையிலுயைவனுமான எம்பெருமானுடைய
பெருமையை,Perumaiyai - மஹிமையை
அறிவார் ஆரே,Arivaar Aare - அறியக் கூடியவர் யார்? (ஒருவருமில்லை)
அவன் வைத்த,Aavan Vaiththa - அப்பெருமான் (முன்பே) ஸாதித்து வைத்த
பண்டைத் தானத்தின் பதி,Pandait Thaanaththin Pathi - பரமபதமார்க்க மென்னத் தகுந்த சரமச்லோகத்தை
கார் செறிந்த கண்டத்தான்,Kaar Serindha Kandaththaan - நீலகண்டனான சிவனும்
எண் கண்ணான்,En Kannaaan - நான் முகனும்
காணான்,Kaanaan - அறியமாட்டார்கள். (அவர்களே அறியமாட்டாதபோது மற்றபேர்கள் அறியமாட்டார்களென்பது சொல்ல வேணுமோ?)