| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2455 | நான்முகன் திருவந்தாதி || தன்னையே யுபாயமாகப் பற்றினாரை ரஷிக்கும் என்னும் இடத்தை ஸ நிதர்சனமாக அருளிச் செய்கிறார் – தான் உத்தம ஸ்லோகத்தை அனுஷ்டிக் காட்டின படியை அருளிச் செய்கிறார் -என்கிறார் ஆகவுமாம்- ந ஷமாமி கதாசன-ந நத்யஜேயம் கதஞ்சன -ஆஸ்ரிதர் பக்கலில் அபகாரம் பண்ணினாரை ஒரு நாளும்-பொறேன் என்ற வார்த்தைக்கும் – மித்ர பாவம் உடையாரை மகாராஜர் தொடக்கமானவர்-விடவரிலும் விடேன் என்ற வார்த்தைக்கும்-அவிருத்தமாக செய்து அருளின படி – ஸூ முகன் என்கிற சர்ப்பத்தை ஆமிஷமாக ஸ்ரீ திருவடி பாதாளத்தில் தேடிச் செல்லுகிற படியை அறிந்து – அதுவும் -கண் வளர்ந்து அருளுகிற திருப் பள்ளிக் கட்டிலை கட்டிக் கொண்டு கிடக்க- ஸ்ரீ திருவடியும் ஸ்ரீ பாதம் தாங்குவார் சொல்லும் வார்த்தைகளைச் சொல்ல -இச் சர்ப்பத்தை திருவடி கையிலே காட்டிக் கொடுத்து ஸ்ரீ திருவடியை இட்டுப் பொறுப்பித்தது -இவனை அவன் கைக் கொள்ளப் பெருகையாலே இரண்டு அர்த்தமும் ஜீவித்தது- 74 | பதிப்பகைஞர்க் காற்றாது பய்திரைநீர்ப் பாழி, மதித்தடைந்த வாளரவந் தன்னை,- மத்திவன்றன் வல்லாகத் தேற்றிய மாமேனி மாயவனை, அல்லதொன் றேத்தாதென் நா. | பதி பகைஞற்கு ஆற்றாது,Pathi Pagaignarukku Aattraadhu - ஸஹஜ சத்ருவான பெரிய திருவடிக்கு அஞ்சி, (- (ஒன்று வேறொன்றை)) பாய் திரை நீர்பாழி,Paai Thirai Neerpaazhi - பாம்பின அலைகளோடே கூடின நீரையுடைத்தான கடல்போலே குளிர்ந்த திருபடுக்கையை மதித்து,Mathiththu - புகலிடமாக நம்பி அடைந்த,Adaindha - வந்துபற்றின வாள் அரவம் தன்னை,Vaal Aravam Thannai - ஒளிபொருந்திய ஸர்ப்பமாகிய ஸுமுகனை மதித்து,Mathiththu - ஆதரித்து அவன் தன்,Avan Than - அந்த (சத்ருவான) கருடனுடைய வல் ஆகத்து ஏற்றிய,Val Aagathu Aettriya - வலிமைதங்கிய சரீரத்திலே ஏறவிட்டவனும் மாமேனி மாயவனை அல்லாது,Maameeni Maayavanai Allaadhu - சிறந்த திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவனுமான ஸர்வேச்சரனை யன்றி என் நா,En Naa - எனது நாவானது ஏத்தாது,Aethaadhu - தோத்திரம் செய்யாது. |