Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2455 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2455நான்முகன் திருவந்தாதி || தன்னையே யுபாயமாகப் பற்றினாரை ரஷிக்கும் என்னும் இடத்தை ஸ நிதர்சனமாக அருளிச் செய்கிறார் – தான் உத்தம ஸ்லோகத்தை அனுஷ்டிக் காட்டின படியை அருளிச் செய்கிறார் -என்கிறார் ஆகவுமாம்- ந ஷமாமி கதாசன-ந நத்யஜேயம் கதஞ்சன -ஆஸ்ரிதர் பக்கலில் அபகாரம் பண்ணினாரை ஒரு நாளும்-பொறேன் என்ற வார்த்தைக்கும் – மித்ர பாவம் உடையாரை மகாராஜர் தொடக்கமானவர்-விடவரிலும் விடேன் என்ற வார்த்தைக்கும்-அவிருத்தமாக செய்து அருளின படி – ஸூ முகன் என்கிற சர்ப்பத்தை ஆமிஷமாக ஸ்ரீ திருவடி பாதாளத்தில் தேடிச் செல்லுகிற படியை அறிந்து – அதுவும் -கண் வளர்ந்து அருளுகிற திருப் பள்ளிக் கட்டிலை கட்டிக் கொண்டு கிடக்க- ஸ்ரீ திருவடியும் ஸ்ரீ பாதம் தாங்குவார் சொல்லும் வார்த்தைகளைச் சொல்ல -இச் சர்ப்பத்தை திருவடி கையிலே காட்டிக் கொடுத்து ஸ்ரீ திருவடியை இட்டுப் பொறுப்பித்தது -இவனை அவன் கைக் கொள்ளப் பெருகையாலே இரண்டு அர்த்தமும் ஜீவித்தது- 74
பதிப்பகைஞர்க் காற்றாது பய்திரைநீர்ப் பாழி,
மதித்தடைந்த வாளரவந் தன்னை,- மத்திவன்றன்
வல்லாகத் தேற்றிய மாமேனி மாயவனை,
அல்லதொன் றேத்தாதென் நா.
பதி பகைஞற்கு ஆற்றாது,Pathi Pagaignarukku Aattraadhu - ஸஹஜ சத்ருவான பெரிய திருவடிக்கு அஞ்சி, (- (ஒன்று வேறொன்றை))
பாய் திரை நீர்பாழி,Paai Thirai Neerpaazhi - பாம்பின அலைகளோடே கூடின நீரையுடைத்தான கடல்போலே குளிர்ந்த திருபடுக்கையை
மதித்து,Mathiththu - புகலிடமாக நம்பி
அடைந்த,Adaindha - வந்துபற்றின
வாள் அரவம் தன்னை,Vaal Aravam Thannai - ஒளிபொருந்திய ஸர்ப்பமாகிய ஸுமுகனை
மதித்து,Mathiththu - ஆதரித்து
அவன் தன்,Avan Than - அந்த (சத்ருவான) கருடனுடைய
வல் ஆகத்து ஏற்றிய,Val Aagathu Aettriya - வலிமைதங்கிய சரீரத்திலே ஏறவிட்டவனும்
மாமேனி மாயவனை அல்லாது,Maameeni Maayavanai Allaadhu - சிறந்த திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவனுமான ஸர்வேச்சரனை யன்றி
என் நா,En Naa - எனது நாவானது
ஏத்தாது,Aethaadhu - தோத்திரம் செய்யாது.