Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2457 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2457நான்முகன் திருவந்தாதி || லோகத்தில் வாச்ய வாசக கோடிகள் அடைய அவனுடைய சங்கல்பத்தாலே யுண்டாய்த்து என்று- அவனையே தாம் கவி பாடுகைக்கு அடியான அவனுடைய வேண்டற்பாடு சொல்லுகிறார் – 76
பாட்டும் முறையும் படுகதையும் பல்பொருளும்
ஈட்டிய தீயும் இருவிசும்பும்,- கேட்ட
மனுவும் சுருதி மறைநான்கும் மாயன்
றனமாயை யிற்பட் ட தற்பு.
பாட்டும் முறையும்,Paatum Muraiyum - இயலும் இசையும்
படு கதையும்,Padu Kathaiyum - பழைய சரிதங்களைக் கூறவந்த இதிஹாஸங்களும்
பல் பொருளும்,Pal Porulum - பல அர்த்தங்களை யறிவிக்கிற புராணங்களும்
ஈட்டிய தீயும்,Eettiya Thiyum - (பஞ்சீகரணத்தாலே பலகுணங்களும் தன்னிலே அமையும்படி) சேர்க்கப்பட்ட அக்நியும்
இரு விசும்பும்,Iru Visumbum - பரந்த ஆகாசமும் (முதலான பஞ்ச பூதங்களும்)
கேட்ட மனுவும்,Kaetta Manuvum - வேதத்திலும் ஓதப்பட்ட மநு மஹர்ஷியின் தர்ம சாஸ்த்ரமும்
கருதி,Karuthi - அநாதியாக உச்சாரண அநூச்சாரண ச்ரமத்தாலே ஓதப்பட்டு வருகிற
மறை நான்கும்,Marai Naankum - நான்கு வேதங்களும் (ஆகிய இவை யெல்லாம்)
மாயன் தன,Maayan Thana - ஆச்சர்ய சக்தியுத்தனான எம்பெருமானுடைய
மாயையில் பட்ட,Maayail Patt - ஸங்கல்பத்தினாலுண்டான
தற்பு,Tharpu - தத்துவங்களாம்.