திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2457 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2457நான்முகன் திருவந்தாதி || லோகத்தில் வாச்ய வாசக கோடிகள் அடைய அவனுடைய சங்கல்பத்தாலே யுண்டாய்த்து என்று- அவனையே தாம் கவி பாடுகைக்கு அடியான அவனுடைய வேண்டற்பாடு சொல்லுகிறார் – 76
பாட்டும் முறையும் படுகதையும் பல்பொருளும் ஈட்டிய தீயும் இருவிசும்பும்,- கேட்ட மனுவும் சுருதி மறைநான்கும் மாயன் றனமாயை யிற்பட் ட தற்பு.
பதவுரை Show / Hide
பாட்டும் முறையும்,Paatum Muraiyum - இயலும் இசையும்
படு கதையும்,Padu Kathaiyum - பழைய சரிதங்களைக் கூறவந்த இதிஹாஸங்களும்
பல் பொருளும்,Pal Porulum - பல அர்த்தங்களை யறிவிக்கிற புராணங்களும்
ஈட்டிய தீயும்,Eettiya Thiyum - (பஞ்சீகரணத்தாலே பலகுணங்களும் தன்னிலே அமையும்படி) சேர்க்கப்பட்ட அக்நியும்
இரு விசும்பும்,Iru Visumbum - பரந்த ஆகாசமும் (முதலான பஞ்ச பூதங்களும்)
கேட்ட மனுவும்,Kaetta Manuvum - வேதத்திலும் ஓதப்பட்ட மநு மஹர்ஷியின் தர்ம சாஸ்த்ரமும்
கருதி,Karuthi - அநாதியாக உச்சாரண அநூச்சாரண ச்ரமத்தாலே ஓதப்பட்டு வருகிற
மறை நான்கும்,Marai Naankum - நான்கு வேதங்களும் (ஆகிய இவை யெல்லாம்)
மாயன் தன,Maayan Thana - ஆச்சர்ய சக்தியுத்தனான எம்பெருமானுடைய
மாயையில் பட்ட,Maayail Patt - ஸங்கல்பத்தினாலுண்டான
தற்பு,Tharpu - தத்துவங்களாம்.