| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2457 | நான்முகன் திருவந்தாதி || லோகத்தில் வாச்ய வாசக கோடிகள் அடைய அவனுடைய சங்கல்பத்தாலே யுண்டாய்த்து என்று- அவனையே தாம் கவி பாடுகைக்கு அடியான அவனுடைய வேண்டற்பாடு சொல்லுகிறார் – 76 | பாட்டும் முறையும் படுகதையும் பல்பொருளும் ஈட்டிய தீயும் இருவிசும்பும்,- கேட்ட மனுவும் சுருதி மறைநான்கும் மாயன் றனமாயை யிற்பட் ட தற்பு. | பாட்டும் முறையும்,Paatum Muraiyum - இயலும் இசையும் படு கதையும்,Padu Kathaiyum - பழைய சரிதங்களைக் கூறவந்த இதிஹாஸங்களும் பல் பொருளும்,Pal Porulum - பல அர்த்தங்களை யறிவிக்கிற புராணங்களும் ஈட்டிய தீயும்,Eettiya Thiyum - (பஞ்சீகரணத்தாலே பலகுணங்களும் தன்னிலே அமையும்படி) சேர்க்கப்பட்ட அக்நியும் இரு விசும்பும்,Iru Visumbum - பரந்த ஆகாசமும் (முதலான பஞ்ச பூதங்களும்) கேட்ட மனுவும்,Kaetta Manuvum - வேதத்திலும் ஓதப்பட்ட மநு மஹர்ஷியின் தர்ம சாஸ்த்ரமும் கருதி,Karuthi - அநாதியாக உச்சாரண அநூச்சாரண ச்ரமத்தாலே ஓதப்பட்டு வருகிற மறை நான்கும்,Marai Naankum - நான்கு வேதங்களும் (ஆகிய இவை யெல்லாம்) மாயன் தன,Maayan Thana - ஆச்சர்ய சக்தியுத்தனான எம்பெருமானுடைய மாயையில் பட்ட,Maayail Patt - ஸங்கல்பத்தினாலுண்டான தற்பு,Tharpu - தத்துவங்களாம். |