Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2458 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2458நான்முகன் திருவந்தாதி || என்னுடைய தோஷத்தையும் பாராதே ஸ்ரீ எம்பெருமான் என் பக்கலிலே திரு உள்ளத்தை வைத்து அருளின பின்பு- என்னுடைய சமஸ்த துக்கங்களும் போயிற்று -என்கிறார் – 77
தற்பென்னைத் தானறியா னேலும், தடங்கடலைக்
கற்கொண்டு தூர்த்த கடல்வண்ணன், – எற்கொண்ட
வெவ்வினையும் நீங்க விலங்கா மனம்வைத்தான்,
எவ்வினையும் மாயுமால் கண்டு.
தட கடலை,Thada Kadalai - பரந்த தெற்கு சமுத்ரத்தை (- (விலங்கா வேறு எங்கும் விலகிப் போகாதபடி))
கல் கொண்டு,Kal Kondu - மலைகளினால்
தூர்த்த,Thoortha - அணைசெய்து அடைத்தவனும்
கடல் வண்ணன் தான்,Kadal Vannam Thaan - கடல் போன்ற கருநிற முடையனுமான எம்பெருமான்
என்னை,Ennai - (தோஷமு வடிவெடுத்தவனான) என்னை
தற்பு,Tharpu - உள்ளபடியே
அறியான் ஏலும்,Ariyaan Aelum - அறிந்திலனாயினும்,
என் கொண்ட,En Konda - என்னைக் கொள்ளை கொண்டிருக்கிற
வெம் வினையும்,Vem Vinaiyum - கொடிய பாவங்கள் யாவும்
நீங்க,Neenga - என்னை விட்டு நீங்கும்படியாக
கண்டு,Kandu - அழகிய திருக்கண்களாலே குளிரக்கடாக்ஷித்து
மனம்,Manam - தனது திருவுள்ளத்தை
வைத்தான்,Vaiththaan - (என்மீதே ஒரு மடைப்படுத்தி) வைத்தருளினன் (ஆகையாலே)
ஏ வினையும்,Ae Vinaiyum - பாபமென்று பேர்பெற்றவை யடங்கலும்
மாயும்,Maayum - உருவழிந்துபோம்