| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2458 | நான்முகன் திருவந்தாதி || என்னுடைய தோஷத்தையும் பாராதே ஸ்ரீ எம்பெருமான் என் பக்கலிலே திரு உள்ளத்தை வைத்து அருளின பின்பு- என்னுடைய சமஸ்த துக்கங்களும் போயிற்று -என்கிறார் – 77 | தற்பென்னைத் தானறியா னேலும், தடங்கடலைக் கற்கொண்டு தூர்த்த கடல்வண்ணன், – எற்கொண்ட வெவ்வினையும் நீங்க விலங்கா மனம்வைத்தான், எவ்வினையும் மாயுமால் கண்டு. | தட கடலை,Thada Kadalai - பரந்த தெற்கு சமுத்ரத்தை (- (விலங்கா வேறு எங்கும் விலகிப் போகாதபடி)) கல் கொண்டு,Kal Kondu - மலைகளினால் தூர்த்த,Thoortha - அணைசெய்து அடைத்தவனும் கடல் வண்ணன் தான்,Kadal Vannam Thaan - கடல் போன்ற கருநிற முடையனுமான எம்பெருமான் என்னை,Ennai - (தோஷமு வடிவெடுத்தவனான) என்னை தற்பு,Tharpu - உள்ளபடியே அறியான் ஏலும்,Ariyaan Aelum - அறிந்திலனாயினும், என் கொண்ட,En Konda - என்னைக் கொள்ளை கொண்டிருக்கிற வெம் வினையும்,Vem Vinaiyum - கொடிய பாவங்கள் யாவும் நீங்க,Neenga - என்னை விட்டு நீங்கும்படியாக கண்டு,Kandu - அழகிய திருக்கண்களாலே குளிரக்கடாக்ஷித்து மனம்,Manam - தனது திருவுள்ளத்தை வைத்தான்,Vaiththaan - (என்மீதே ஒரு மடைப்படுத்தி) வைத்தருளினன் (ஆகையாலே) ஏ வினையும்,Ae Vinaiyum - பாபமென்று பேர்பெற்றவை யடங்கலும் மாயும்,Maayum - உருவழிந்துபோம் |