| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2460 | நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ எம்பெருமானை ஹிருதயத்திலே வைத்தவர்கள் வ்யதிரிக்தங்களை எல்லாம் உபேஷித்து- ஸ்ரீ பரம பதத்தை காண்கையிலே அபி நிவேசியாய் நிற்பார்கள் -என்கிறார் ஸ்ரீ பகவத் விஷயத்தில் ருசி உடையவர்கள்-அவனை ஏகாந்தமாக அனுபவிக்கலாம் தேசம் ஸ்ரீ பரம பதம்-என்று ஆசைப்பட்டு அதுக்கு காற்கட்டாய் ஆயிற்று என்று-சொல்லலாம்படி அபிமானித்த சரீரத்தை – சரீரம் வ்ரணவத் பச்யேத் -என்னும்படி யாக நோயாக விரும்புவர்கள் -என்கிறார் 79 | ஆய்ந்துகொண்ட டாதிப் பெருமானை, அன்பினால் வாய்ந்த மனதிருத்த வல்லார்கள், – ஏய்ந்ததம் மெய்குந்த மாக விரும்புவரே, தாமும்தம் வைகுந்தம் காண்பார் விரைந்து. | ஆதி,Aadhi - ஜகத்காரணபூதனான பெருமானை,Perumaiyai - ஸர்வேச்வரனை அன்பினால்,Anbinal - ப்ரேமத்துடன் ஆய்ந்து கொண்டு,Aayndhu Konda - அநுஸந்தித்துக் கொண்டு வாய்ந்த மனத்து,Vaayndha Manaththu - (தமது) பாங்கான நெஞ்சிலே இருத்த வல்லார்கள் தாமும்,Iruththa Vallaarkal Thaamum - நிலை நிறுத்திக்கொள்ள சக்தரானவர்கள் தம் வைகுந்தம்,Tham Vaikundham - தங்களுக்கென்று ஏற்பட்டுள்ள பரமபத்ததை விரைந்து,Viraindhu - சீக்கிரமாக காண்பார்,Kaanpaar - காணவிரும்பமுடையராய் ஏய்ந்த,Eyndha - ஆத்மாவோடு செறிந்த தம்மெய்,Thammaiy - தங்களுடைய உடம்பை குந்தம் ஆக,Kuntham Aaga - வியாதியாக விரும்புவர்,Virumbuvar - எண்ணுவர் |