திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2460 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2460நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ எம்பெருமானை ஹிருதயத்திலே வைத்தவர்கள் வ்யதிரிக்தங்களை எல்லாம் உபேஷித்து- ஸ்ரீ பரம பதத்தை காண்கையிலே அபி நிவேசியாய் நிற்பார்கள் -என்கிறார் ஸ்ரீ பகவத் விஷயத்தில் ருசி உடையவர்கள்-அவனை ஏகாந்தமாக அனுபவிக்கலாம் தேசம் ஸ்ரீ பரம பதம்-என்று ஆசைப்பட்டு அதுக்கு காற்கட்டாய் ஆயிற்று என்று-சொல்லலாம்படி அபிமானித்த சரீரத்தை – சரீரம் வ்ரணவத் பச்யேத் -என்னும்படி யாக நோயாக விரும்புவர்கள் -என்கிறார் 79
ஆய்ந்துகொண்ட டாதிப் பெருமானை, அன்பினால் வாய்ந்த மனதிருத்த வல்லார்கள், – ஏய்ந்ததம் மெய்குந்த மாக விரும்புவரே, தாமும்தம் வைகுந்தம் காண்பார் விரைந்து.
பதவுரை Show / Hide
ஆதி,Aadhi - ஜகத்காரணபூதனான
பெருமானை,Perumaiyai - ஸர்வேச்வரனை
அன்பினால்,Anbinal - ப்ரேமத்துடன்
ஆய்ந்து கொண்டு,Aayndhu Konda - அநுஸந்தித்துக் கொண்டு
வாய்ந்த மனத்து,Vaayndha Manaththu - (தமது) பாங்கான நெஞ்சிலே
இருத்த வல்லார்கள் தாமும்,Iruththa Vallaarkal Thaamum - நிலை நிறுத்திக்கொள்ள சக்தரானவர்கள்
தம் வைகுந்தம்,Tham Vaikundham - தங்களுக்கென்று ஏற்பட்டுள்ள பரமபத்ததை
விரைந்து,Viraindhu - சீக்கிரமாக
காண்பார்,Kaanpaar - காணவிரும்பமுடையராய்
ஏய்ந்த,Eyndha - ஆத்மாவோடு செறிந்த
தம்மெய்,Thammaiy - தங்களுடைய உடம்பை
குந்தம் ஆக,Kuntham Aaga - வியாதியாக
விரும்புவர்,Virumbuvar - எண்ணுவர்