| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2461 | நான்முகன் திருவந்தாதி || லோகம் அடைய ஸ்ரீ வைஷ்ணவர்களேயாய் பாடி ஆடுவதும் செய்து -நரகத்தில் கதவுகளும் பிடுங்கிப் பொகட்டது – இனி எல்லாரும் அவனை ஆஸ்ரயியுங்கோள்-என்கிறார் – பிரளயம் தேடி வந்தாலும் அத்தனை போதும்-தெரியாதபடி மறைத்து காத்து ரஷித்த ஸ்ரீ கிருஷ்ணனை விரைந்து அடையுங்கோள் 80 | விரைந்தடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க, கரந்துலகம் காத்தளித்த கண்ணன் – பரந்துலகம் பாடின ஆடின கேட்டு,படுநரகம் வீடின வாசற் கதவு. | உலகம்,Ulagam - சிறந்த பாகவதர்கள் பரந்து,Parandhu - எங்குத் திரிந்து பாடின,Paadina - பாடின பாடல்களையும் ஆடின,Aadina - ஆடின ஆட்டங்களையும் கேட்டு,Kettu - கேட்டதனால் படு நரகம் வாசல்,Padu Naragam Vaasal - க்ரூரமான நரகங்களின் வாசல்களிலிருந்த கதவு,Kathavu - கதவுகள் வீடின,Veedhina - விட்டொழிந்தன (நரக வாசல்கள் பாழாய்ப் போயின) மேல் ஒருநாள்,Mel Orunaal - முன்னொரு காலத்தில் வெள்ளம் பரக்க,Vellam Parakka - பிரளய வெள்ளம் பரவினபோது உலகம்,Ulagam - உலகங்களை யெல்லாம் கரந்து,Karandhu - (திருவயிற்றில்) மறைத்து வைத்து காத்து அளித்த,Kaathu Alitha - துன்பங்களைப் போக்கி ரக்ஷித்த கண்ணன்,Kannan - கண்ணபிரானை விரைந்து அடைமின்,Virainthu Adaimin - சீக்கிரமாகச் சென்று பணியுங்கோள் |