திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2461 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2461நான்முகன் திருவந்தாதி || லோகம் அடைய ஸ்ரீ வைஷ்ணவர்களேயாய் பாடி ஆடுவதும் செய்து -நரகத்தில் கதவுகளும் பிடுங்கிப் பொகட்டது – இனி எல்லாரும் அவனை ஆஸ்ரயியுங்கோள்-என்கிறார் – பிரளயம் தேடி வந்தாலும் அத்தனை போதும்-தெரியாதபடி மறைத்து காத்து ரஷித்த ஸ்ரீ கிருஷ்ணனை விரைந்து அடையுங்கோள் 80
விரைந்தடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க, கரந்துலகம் காத்தளித்த கண்ணன் – பரந்துலகம் பாடின ஆடின கேட்டு,படுநரகம் வீடின வாசற் கதவு.
பதவுரை Show / Hide
உலகம்,Ulagam - சிறந்த பாகவதர்கள்
பரந்து,Parandhu - எங்குத் திரிந்து
பாடின,Paadina - பாடின பாடல்களையும்
ஆடின,Aadina - ஆடின ஆட்டங்களையும்
கேட்டு,Kettu - கேட்டதனால்
படு நரகம் வாசல்,Padu Naragam Vaasal - க்ரூரமான நரகங்களின் வாசல்களிலிருந்த
கதவு,Kathavu - கதவுகள்
வீடின,Veedhina - விட்டொழிந்தன (நரக வாசல்கள் பாழாய்ப் போயின)
மேல் ஒருநாள்,Mel Orunaal - முன்னொரு காலத்தில்
வெள்ளம் பரக்க,Vellam Parakka - பிரளய வெள்ளம் பரவினபோது
உலகம்,Ulagam - உலகங்களை யெல்லாம்
கரந்து,Karandhu - (திருவயிற்றில்) மறைத்து வைத்து
காத்து அளித்த,Kaathu Alitha - துன்பங்களைப் போக்கி ரக்ஷித்த
கண்ணன்,Kannan - கண்ணபிரானை
விரைந்து அடைமின்,Virainthu Adaimin - சீக்கிரமாகச் சென்று பணியுங்கோள்