| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2462 | நான்முகன் திருவந்தாதி || நீ இப்படி என்னைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ளுகையாலே உன்னைக் காண முடியுமோ முடியாதோ- என்னும் சந்தேஹம் தீர்ந்தேன் -என்கிறார் – மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயோ-என்னும்படி ஸ்ரீ பகவத் விஷயம் கிட்டாமைக்கு கதவு மனஸ் என்றுமாம் – காண்கைக்கும் பரிகரம் மனஸ் என்றுமாம் – 81 | கதவு மனமென்றும் காணலா மென்றும், குதையும் வினையாவி தீர்ந்தேன், – விதையாக நற்றமிழை வித்தியென் உள்ளத்தை நீவிளைத் தாய், கற்றமொழி யாகிக் கலந்து. | நீ,Nee - (ஞானம் சக்தி முதலியவற்றால் குறைவற்றவனான) நீ கற்ற மொழி ஆகி,Katra Mozhi Aagi - நான் கற்ற சொற்களுக்குப் பொருளாக இருந்து கொண்டு கலந்து,Kalandhu - என்னோடு ஒரு நீராகக் கலந்து நல் தமிழை,Nal Tamizhai - சிறந்த தமிழ்ப் பாஷையினாலாகிய இப்பிரபந்தத்தை விதை ஆக வித்தி,Vidhai Aaga Viththi - (பக்தியாகிற பயிர்க்கு) விதையாக விதைத்து என் உள்ளத்தை,En Ullaththai - எனது ஹ்ருதயத்தை விளைத்தாய்,Vilaitthai - விளையும்படி க்ருஷி பண்ணினாய் மனம்,Manam - மனமானது கதவு என்றும்,Kathavu Endrum - எம்பெருமானையடைவதற்குப் பிரதிபந்தகம் என்று (சில மையங்களில்) நினைத்தும் (மனம்) காணல் ஆம் என்றும்,Manam Kaanal Aam Endrum - (மனமானது) எம்பெருமானைக் காண்பதற்கு உறுப்பாகும் என்று (சில சமயங்களில்) நினைத்தும் குதையும் வினை ஆவி தீர்ந்தேன்,Kuthaiyum Vinai Aavi Theerndhen - (ஆகவிப்படி ஒரு நிலை நில்லாமல் மாறி மாறி) பிரமிப்பதையே தொழிலாக வுடைத்தான நெஞ்சைத் தவிர்த்தேன். |