Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2462 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2462நான்முகன் திருவந்தாதி || நீ இப்படி என்னைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ளுகையாலே உன்னைக் காண முடியுமோ முடியாதோ- என்னும் சந்தேஹம் தீர்ந்தேன் -என்கிறார் – மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயோ-என்னும்படி ஸ்ரீ பகவத் விஷயம் கிட்டாமைக்கு கதவு மனஸ் என்றுமாம் – காண்கைக்கும் பரிகரம் மனஸ் என்றுமாம் – 81
கதவு மனமென்றும் காணலா மென்றும், குதையும்
வினையாவி தீர்ந்தேன், – விதையாக நற்றமிழை
வித்தியென் உள்ளத்தை நீவிளைத் தாய்,
கற்றமொழி யாகிக் கலந்து.
நீ,Nee - (ஞானம் சக்தி முதலியவற்றால் குறைவற்றவனான) நீ
கற்ற மொழி ஆகி,Katra Mozhi Aagi - நான் கற்ற சொற்களுக்குப் பொருளாக இருந்து கொண்டு
கலந்து,Kalandhu - என்னோடு ஒரு நீராகக் கலந்து
நல் தமிழை,Nal Tamizhai - சிறந்த தமிழ்ப் பாஷையினாலாகிய இப்பிரபந்தத்தை
விதை ஆக வித்தி,Vidhai Aaga Viththi - (பக்தியாகிற பயிர்க்கு) விதையாக விதைத்து
என் உள்ளத்தை,En Ullaththai - எனது ஹ்ருதயத்தை
விளைத்தாய்,Vilaitthai - விளையும்படி க்ருஷி பண்ணினாய்
மனம்,Manam - மனமானது
கதவு என்றும்,Kathavu Endrum - எம்பெருமானையடைவதற்குப் பிரதிபந்தகம் என்று (சில மையங்களில்) நினைத்தும்
(மனம்) காணல் ஆம் என்றும்,Manam Kaanal Aam Endrum - (மனமானது) எம்பெருமானைக் காண்பதற்கு உறுப்பாகும் என்று (சில சமயங்களில்) நினைத்தும்
குதையும் வினை ஆவி தீர்ந்தேன்,Kuthaiyum Vinai Aavi Theerndhen - (ஆகவிப்படி ஒரு நிலை நில்லாமல் மாறி மாறி) பிரமிப்பதையே தொழிலாக வுடைத்தான நெஞ்சைத் தவிர்த்தேன்.