Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2465 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2465நான்முகன் திருவந்தாதி || ருத்ரனும் ஸ்ரீ எம்பெருமானை ஆஸ்ரயிக்கும் இதுவே தொழிலாகப் பூண்ட என்னோடு ஒவ்வான் -என்கிறார்- அவனோபாதி நானும் வ்யாவ்ருத்தன் என்கிறார் — 84
பிதிரும் மனமிலேன் பிஞ்ஞகன் றன்னோடு,
எதிர்வன் அவனெனக்கு நேரான், – அதிரும்
கழற்கால மன்னனையே கண்ணனையே, நாளும்
தொழக்காதல் பூண்டேன் தொழில்.
அதிரும் கழல் கால,Adhirum Kazhal Kaala - ஒலிக்கின்ற வீரக்கழலைத் திருவடிகளிலே அணிந்துள்ள
மனன்னை,Manannai - ராஜாதிராஜனான
கண்ணனையே,Kannanaie - கண்ணபிரானையே
நாளும்,Naalum - எந்நாளும்
தொழ,Thozha - தொழும்படியாக
காதல்,Kaadhal - ஆசைப்படுவதையே
தொழில்,Thozhil - நித்ய கருமமாக
பூண்டேன்,Poondhen - ஏற்றுக்கொண்டிருக்கிற நான்
பிதிரும் மனம் இலேன்,Pithirum Manam Ileen - (விஷயாந்தரங்களிற் புகுந்து) விகாரப்படும் நெஞ்சுடையேனல்லேன்
பிஞ்ஞகன் தன்னோடு எதிரவன்,Pinjagan Thannodu Edhiravan - (ஞானத்தில்) பரமசிவனோடு ஒத்திருப்பேன் (என்னலாமாயினும்)
அவன் எனக்கு நேரான்,Avan Enakku Neraan - அந்த ருத்ரன் (நித்ய தாஸனான) என்னோடு ஒவ்வான்.