| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2466 | நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ எம்பெருமான் திரு நாம சங்கீர்த்தனம் எனக்கு நித்ய கர்ம அனுஷ்டானம் – மற்று வேறு ஒன்றில் நெஞ்சு செலுத்த ஒண்ணாதபடி -ஸ்ரீ எம்பெருமான் என் நெஞ்சுக்குள்ளே உறைகின்றான் காண்மின் -என்கிறார்- எதிரிகள் சதுரங்கம் பொரப் பொருவீரொ என்று அழைக்க இவர் சொல்லும்படி -எனக்கு தொழில் புராணனான சர்வேஸ்வரனை ஏத்த- 85 | தொழிலெனக்குத் தொல்லைமால் தன்னாம மேத்த, பொழுதெனக்கு மற்றதுவே போதும், – கழிசினத்த வல்லாளன் வானரக்கோன் வாலி மதனழித்த, வில்லாளன் நெஞ்சத் துளன். | கழி சினத்த,Kazhi Sinath - மிகக்கோபத்தை யுடையவனும் வல்லாளன்,Vallalan - மிக்க வலிமையுடையவனும் வானார் கோன்,Vaanar Kon - குரங்குகட்கு அரசனுமாகிய வாலி,Vaali - வாலியினுடைய மதன்,Madhan - மதத்தை (கொழுப்பை அழித்த,Azitha - தொலைத்த வில் ஆளன்,Vil Aalan - சார்ங்கவில்லை ஆள்பவனான இராமபிரான் நெஞ்சத்து,Nenjaththu - எனது நெஞசிடத்து உளன்,Ulan - எழுந்தருளி யிருக்கின்றான் எனக்கு,Enakku - (அந்த இராமபிரானுடைய திருக்குணங்களில் அகப்பட்ட) எனக்கு தொழில்,Thozhil - நித்யகருமம் தொல்லை மால் தன் நாமம் ஏத்த,Thollai Maal Than Naamam Aetha - புராணனான அந்த ஸர்வேச்வரனுடைய திருநாமங்களை வாயாரப் புகழ்வதாம் எனக்கு,Enakku - (உலகத்தாரில் வேறு பட்டவனான) எனக்கு மற்றதுவே,Mattrathuve - கீழ்ச்சொன்ன ஸ்ரீராமநாம ஸங்கீர்த்தனத்தினாலேயே பொழுது போதும்,Pozhudhu Podhum - போதுபோகும். |