Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2467 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2467நான்முகன் திருவந்தாதி || ஆழ்வார் தம்முடைய ஆஸ்திக்யத்தின் உறைப்பை நன்கு வெளியிட்டு அருளுகிறார் – அல்லாதாருக்கும் சர்வேஸ்வரன் உளன் என்று உபபாதித்தேன் நீயும் இவ்வர்த்தத்தை உண்டு என்று நினைத்து இரு என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்- 86
உளன்கண்டாய் நன்நெஞ்சே. உத்தம னென்றும்
உளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத், – துளன்கண்டாய்
தன்னொப்பான் தானா யுளன்காண் தமியேற்கும்,
என்னொப்பார்க் கீச னிமை.
நல் நெஞ்சை,Nal Nenjai - எனக்குப் பாங்கான மனமே!
உத்தமன்,Uthaman - புருஷோத்தமனான எம்பெருமான்
உளன் கண்டாய்,Ulan Kandaai - (நம்மை ரக்ஷிப்பதனாலே) ஸத்தை பெற்றிருப்பவன் காண்
தன் ஒப்பான்,Than Oppaan - (தனக்குப் பிறரொருவரும் ஒப்பில்லாமையாலே) தனக்குத்தானே ஒத்திருப்பவனான அந்த எம்பெருமான்
தமியேற்கு,Thamiyerku - ஒரு கைம்முதலுமற்றவனான எனக்கும்
என்றும் உளன் கண்டாய்,Endrum Ulan Kandaai - எக்காலத்திலும் (நம்மை ரக்ஷிப்பதிலே தீக்ஷை கொண்டு) இருக்கிறான் காண்க.
உள்ளுவார் உள்ளத்து,Ulluvaar Ullaththu - ஆஸ்திகர்களுடைய மனத்திலே
உளன் கண்டாய்,Ulan Kandaai - நித்யவாஸம் பண்ணுமவன் காண்
என் ஒப்பார்க்கு,En Oppaarkku - என்னைப்போலே உபாய சூந்யராயிருப்பவர்கட்கும்
தான் ஈசன் ஆய் உளன் காண்,Thaan Eesan Aayi Ulan Kaan - தானே நிர்வாஷகனாயிருக்கிறான் காண்
இமை,Imai - இதனை அறி.