Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2468 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2468நான்முகன் திருவந்தாதி || சர்வ ரக்ஷகன் அவனே என்பதை மூதலிக்கிறார் — தம்மை ஒக்கும் அகிஞ்சனவர்க்கு இவன் நிர்வாஹகன் ஆனபடியைக் காட்டுகிறார்- 87
இமையப் பெருமலைபோ லிந்திரனார்க் கிட்ட,
சமய விருந்துண்டார் காப்பார் – சமயங்கள்
கண்டான் அவைகாப்பான் கார்க்கண்டன் நான்முகனோடு
உண்டா னுலகோ டுயிர்.
இமயம் பெருமலைபோல்,Imayam Perumalipol - பெரிய இமயமலை போன்றிருக்கும்படி
இந்திரனார்க்கு இட்ட,Indiranarkku Itta - இந்திரனுக்காகச் சமைத்து வைத்த
சமயம் விருந்து,Samayam Virundhu - வழக்கமான ஆராதனையை
உண்டு,Undu - உட்கொண்டபோது (நேர்ந்த கல்மழையாலாகிய ஆபத்தில் நின்றும்)
கார்க்கண்டன் நான்முகனோடு காப்பான் ஆர்,Kaarkandan Naanmuganodu Kaappaan Aar - சிவனையும் பிரமனையும் (பெரிய ஆபத்துக்களில் நின்றும்) ரக்ஷிப்பவன் யார்?
ஆர் காப்பார்,Aar Kaappaar - காப்பாற்றினது யார்?
சமயங்கள்,Samayangal - வைதிக மதங்களை
கண்டான்,Kandaan - பிரவர்த்திப்பித்தவன்
ஆர்,Aar - யார்?
அவை காப்பான்,Avai Kaappaan - அவற்றை (நிலை குலையாதபடி) ரக்ஷிப்பவன்
ஆர்,Aar - யார்?
உலகோடு உயிர் உண்டான் ஆர்,Ulagodu Uyir Undaan Aar - உலகங்களையும் (உலகங்களிலுள்ள ஜீவராசிகளையும் (பிரளயத்தில்) உண்டு ரக்ஷித்தவன் யார்? (எல்லாம் எம்பெருமானே யன்றோ)