| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2468 | நான்முகன் திருவந்தாதி || சர்வ ரக்ஷகன் அவனே என்பதை மூதலிக்கிறார் — தம்மை ஒக்கும் அகிஞ்சனவர்க்கு இவன் நிர்வாஹகன் ஆனபடியைக் காட்டுகிறார்- 87 | இமையப் பெருமலைபோ லிந்திரனார்க் கிட்ட, சமய விருந்துண்டார் காப்பார் – சமயங்கள் கண்டான் அவைகாப்பான் கார்க்கண்டன் நான்முகனோடு உண்டா னுலகோ டுயிர். | இமயம் பெருமலைபோல்,Imayam Perumalipol - பெரிய இமயமலை போன்றிருக்கும்படி இந்திரனார்க்கு இட்ட,Indiranarkku Itta - இந்திரனுக்காகச் சமைத்து வைத்த சமயம் விருந்து,Samayam Virundhu - வழக்கமான ஆராதனையை உண்டு,Undu - உட்கொண்டபோது (நேர்ந்த கல்மழையாலாகிய ஆபத்தில் நின்றும்) கார்க்கண்டன் நான்முகனோடு காப்பான் ஆர்,Kaarkandan Naanmuganodu Kaappaan Aar - சிவனையும் பிரமனையும் (பெரிய ஆபத்துக்களில் நின்றும்) ரக்ஷிப்பவன் யார்? ஆர் காப்பார்,Aar Kaappaar - காப்பாற்றினது யார்? சமயங்கள்,Samayangal - வைதிக மதங்களை கண்டான்,Kandaan - பிரவர்த்திப்பித்தவன் ஆர்,Aar - யார்? அவை காப்பான்,Avai Kaappaan - அவற்றை (நிலை குலையாதபடி) ரக்ஷிப்பவன் ஆர்,Aar - யார்? உலகோடு உயிர் உண்டான் ஆர்,Ulagodu Uyir Undaan Aar - உலகங்களையும் (உலகங்களிலுள்ள ஜீவராசிகளையும் (பிரளயத்தில்) உண்டு ரக்ஷித்தவன் யார்? (எல்லாம் எம்பெருமானே யன்றோ) |