திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2469 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2469நான்முகன் திருவந்தாதி || இப்பாட்டிலும் அவ்வர்த்தத்தையே விஸ்தரிக்கிறார் – உபாடாந்தரங்களை அனுஷ்ட்டிக்கும் ப்ரவ்ருத்தி தர்ம நிஷ்டர்கள் போல் அன்றிக்கே -ஸ்வரூப உசிதங்களான-திரு விளக்கு எரிக்கை திருமாலை எடுக்கை போன்ற பிரவ்ருத்திகளையும் உபாய புத்தி இன்றிக்கே ஸ்வயம் புருஷார்த்த புத்தியுடன் அனுஷ்ட்டித்து அவன் நிர்ஹேதுக கிருபை அன்றி பேற்றுக்கு உபாயம் இல்லை என்று அத்யவசித்து காம்பறத் தலை சிரைத்து அவன் கடைத்தலை இருந்து வாழும் சோம்பர்- அகிஞ்சனராய் இருக்கும் நிவ்ருத்தி தர்ம நிஷ்டர் -இவர்களுக்கு தானே நேரில் சென்று அயர்வுகளை தீர்க்கும் ஸ்ரீ எம்பெருமான் திரு நாமங்களையே மகிழ்ந்து பாடி வாழ்வதே வாழ்வு- 88
உயிர்கொண் டுடலொழிய ஓடும்போ தோடி, அயர்வென்ற தீர்ப்பான்பேர் பாடி, – செயல்தீரச் சிந்தித்து வாழ்வாரே வாழ்வார், சிறுசமயப் பந்தனையார் வாழ்வேல் பழுது.
பதவுரை Show / Hide
உடல் ஒழிய,Udal Ozhiy - சரீரத்தைப் போட்டு விட்டு
உயிர் கொண்டு,Uyir Kondu - ஆத்மாவைப் பிடித்துக்கொண்டு
ஓடும்போது,Oadum Podhu - (யமபடர்கள்) ஓடும்போது
ஓடி,Oadi - (எம்பெருமானாகிய தானே) ஓடிச் சென்று
செயல் தீர,Seyal Theera - பேற்றுக்காக நாம் செய்ய வேண்டிய செயல் (ப்ரவ்ருத்தி) ஒன்றுமில்லை யென்று
சிந்தித்து,Sindhithu - ஸ்வரூபத்தை யுணர்ந்து
வாழ்வாரே,Vazhvaarae - வாழநினைப்பவர்களே
வாழ்வார்,Vazhvaar - வாழ்ச்சி பெறுவர்
அயர்வு என்ற,Ayirvu Endra - கஷ்ட மென்று சொல்லப் படுகிற எல்லாவற்றையும்
தீர்ப்பான்,Theerppaan - தீர்க்குமவனான எம்பெருமானுடைய
பேர்,Per - திருநாமங்களை
பாடி,Paadi - வாய்விட்டுப் பாடி
சிறு சமயம் பந்தனையார்,Siru Samayam Pandhanaiyaar - அற்பங்களாய் பல நியமங்களோடு கூடினவையாய் ஸம்ஸாரபந்தத்திற்கே காரணமாகவுள்ளவையான உபாயங்களைப் பற்றினவர்களுடைய
வாழ்வு ஏல்,Vazhvu Ael - வாழ்ச்சியோ வென்றால்
பழுது,Pazhuthu - உபயோகமற்றது.