| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2470 | நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ எம்பெருமானை ஆச்ரயிப்பதுபோல் காட்டிலும் பாகவதர்கள் பாதம் பணிதல் பாங்கு என்னும் பரம ரகஸ்யார்த்தை வெளியிட்டு அருளுகிறார் – கீழே மாறாய தானவனை 18-பாசுரத்தில் மேலும் இத்தையே அருளிச் செய்கிறார்- சித்திர்ப் பவதி வா நேதி சம்சய வுச்யுதஸேவி நாம் ந சம்சயோஸ்தி தத் பக்த பரிசர்ய ஆரதாத்மநாம் -மோக்ஷ ஏக ஹேது அன்றோ மார்பிலே கை வைத்து உறங்கலாம் -அதனால் -பழுதாகது ஓன்று அறிந்தேன்-என்று கம்பீரமாக அருளிச் செய்கிறார் – இங்கே பாகவதர்களை ஆஸ்ரயிக்கையாலே-அங்கே நித்ய சூரிகளுக்கு அடிமை செய்யப் பெறுவார் என்கிறது- 89 | பழுதாகா தொன்றறிந்தேன் பாற்கடலான் பாதம், வழுவா வகைநினைந்து வைகல் – தொழுவாரை, கண்டிறைஞ்சி வாழ்வார் கலந்த வினைகெடுத்து விண்திறந்து வீற்றிருப்பார் மிக்கு, | பழுது ஆகாது ஒன்று,Pazhuthu Aagathu Ondru - பழுதுபடாத (சிறந்த) ஒரு பாயத்தை அறிந்தேன்,Arindhen - தெரிந்து கொண்டேன் (அது என்னவென்றால் கேண்மின்) பால் கடலான் பாதம்,Paal Kadalaan Paatham - க்ஷீராப்தி நாதனுடைய திருவடிகளை வாழுவா வகை நினைத்து,Vazhavaa Vagai Ninaithu - தப்பாதபடி அநுஸந்தித்து வைகல் தொழுவாரை,Vaikal Thozhuvaarai - எப்போதும் வணங்குமவர்களை கண்டு இறைஞ்சி,Kandu Irainji - கண்டு வணங்கி வாழ்வார்,Vazhvaar - வாழ்பவர்கள் (பாகவத பக்தர்கள்) கலந்த வினைகெடுத்து,Kalanda Vinaikethu - ஆத்மாவோடு சேர்ந்த தீவினைகளைத் தொலைத்து வின் திறந்து,Vin Thirandhu - பரமபதவாசலைத் திறந்து மிக்கு,Mikku - சிறப்புடனே வீற்றிருப்பார்,Veettriruppaar - எழுந்தருளியிருக்கப்பெறுவர் |