Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2470 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2470நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ எம்பெருமானை ஆச்ரயிப்பதுபோல் காட்டிலும் பாகவதர்கள் பாதம் பணிதல் பாங்கு என்னும் பரம ரகஸ்யார்த்தை வெளியிட்டு அருளுகிறார் – கீழே மாறாய தானவனை 18-பாசுரத்தில் மேலும் இத்தையே அருளிச் செய்கிறார்- சித்திர்ப் பவதி வா நேதி சம்சய வுச்யுதஸேவி நாம் ந சம்சயோஸ்தி தத் பக்த பரிசர்ய ஆரதாத்மநாம் -மோக்ஷ ஏக ஹேது அன்றோ மார்பிலே கை வைத்து உறங்கலாம் -அதனால் -பழுதாகது ஓன்று அறிந்தேன்-என்று கம்பீரமாக அருளிச் செய்கிறார் – இங்கே பாகவதர்களை ஆஸ்ரயிக்கையாலே-அங்கே நித்ய சூரிகளுக்கு அடிமை செய்யப் பெறுவார் என்கிறது- 89
பழுதாகா தொன்றறிந்தேன் பாற்கடலான் பாதம்,
வழுவா வகைநினைந்து வைகல் – தொழுவாரை,
கண்டிறைஞ்சி வாழ்வார் கலந்த வினைகெடுத்து
விண்திறந்து வீற்றிருப்பார் மிக்கு,
பழுது ஆகாது ஒன்று,Pazhuthu Aagathu Ondru - பழுதுபடாத (சிறந்த) ஒரு பாயத்தை
அறிந்தேன்,Arindhen - தெரிந்து கொண்டேன் (அது என்னவென்றால் கேண்மின்)
பால் கடலான் பாதம்,Paal Kadalaan Paatham - க்ஷீராப்தி நாதனுடைய திருவடிகளை
வாழுவா வகை நினைத்து,Vazhavaa Vagai Ninaithu - தப்பாதபடி அநுஸந்தித்து
வைகல் தொழுவாரை,Vaikal Thozhuvaarai - எப்போதும் வணங்குமவர்களை
கண்டு இறைஞ்சி,Kandu Irainji - கண்டு வணங்கி
வாழ்வார்,Vazhvaar - வாழ்பவர்கள் (பாகவத பக்தர்கள்)
கலந்த வினைகெடுத்து,Kalanda Vinaikethu - ஆத்மாவோடு சேர்ந்த தீவினைகளைத் தொலைத்து
வின் திறந்து,Vin Thirandhu - பரமபதவாசலைத் திறந்து
மிக்கு,Mikku - சிறப்புடனே
வீற்றிருப்பார்,Veettriruppaar - எழுந்தருளியிருக்கப்பெறுவர்