Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2471 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2471நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ பரம பதத்தில் பெருமை பொலிய இருந்து ஆட் செய்ய விரும்பி அப்படியே பேறு பெற்றவர்கள் ஸ்ரீ திருவேங்கடமுடையான் பக்கலிலே பல வகைப்பட்ட மலர்களை நன்றாக சமர்ப்பித்தவர்களே யாவர் – ஸ்ரீ பகவானை ஆராதித்தவர்கள் விண்ணாள்வர் -என்றபடி- விலஷணமான ஸ்ரீ பாகவத பிராப்தி காமராய்-அது பெற்றவர்கள் பாகவதராலே அங்கீ க்ருதர் ஆனவர்கள் -என்கிறார் ஸ்ரீ எம்பெருமான் திரு உள்ளத்தில் செல்லுவன அறிந்து-அதுக்கு ஈடான அடிமைகளில் ஸ்நேஹித்து- அவன் பக்கலில் பிரவணர் ஆனவர்களாலே-விஷயீ க்ருதர் ஆனவர்கள் -யதோ உபாசனம் பலம் 90
வீற்றிருந்து விண்ணாள வேண்டுவார், வேங்கடத்தான்
பால்திருந்த வைத்தாரே பன்மலர்கள், – மேல்திருந்த
வாழ்வார் வருமதிபார்த் தன்பினராய், மற்றவர்க்கே
தாழா யிருப்பார் தமர்.
விண்,Vin - பரமபதத்தில்
வீற்றிருந்து,Veettrirundhu - பெருமை பொலிய இருந்து
ஆள வேண்டுவார்,Aala Venduvar - ஆட்சிசெய்ய விரும்பி அப்படியே பேறு பெற்றவர்கள்
வேங்கடத்தான் பால்,Vengadaththaan Paal - திருவேங்கட முடையான் பக்கலில்
பல் மலர்கள்,Pal Malargal - பலவகைப்பட்ட மலர்களை
திருந்த,Thirundha - நன்றாக
வைத்தாரே,Vaiththaare - ஸமர்ப்பித்தவர்களே யாவர் (பகவானை ஆராதித்தவர்களே விண் ஆள்வர் என்கை)
வரும் மதி பார்த்து,Varum Mathi Paarththu - (எம்பெருமானுடைய திருவுள்ளத்தில்) ஓடுகின்ற கருத்தை யறிந்து
அன்பினர் ஆய்,Anbinar Aay - பக்தியை யுடையவர்களாய்
மற்றவற்கே,Mattravarkke - அந்த எம்பெருமானுக்கே
தாழ்வு ஆய் இருப்பார்,Thaalvu Aay Iruppaar - அடிமைப்பட்டிருப்பவர்களுக்கு
தமர்,Thamar - அடிமைப்பட்டவர்கள்
மேல் திருந்த வாழ்வார்,Mel Thirundha Vaazhvaar - முன்னடிகளிற் சொல்லப்பட்டவர்களிற் காட்டிலும் விலக்ஷணராக வாழ்பவராம்.