| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2472 | நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளே உபாய உபேயங்கள் என்று உறுதி கொண்டு இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் உபய விபூதில் உள்ளார்க்கும் நிர்வாஹகராகும் படியான பெருமையை யுடையவர்கள் -என்கிறார் – நித்ய சூரிகளோபாதி இங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களும்-ப்ரஹ்மாதிகளுக்கு பூஜ்யர் -என்றபடி 91 | தமராவர் யாவருக்கும் தாமரைமே லாற்கும் அமரர்க்கும் ஆடரவார்த் தாற்கும் – அமரர்கள் தாள்தா மரைமலர்க ளிட்டிறைஞ்சி, மால்வண்ணன் தாள்தா மரையடைவோ மென்று. | மால் வண்ணன்,Maal Vannan - கரியமேனியனான எம்பெருமானுடைய தாள் தாமரை,Thaal Thaamarai - திருவடித் தாமரைகளில் மலர்கள் இட்டு,Malargal Ittu - புஷ்பங்களை ஸமர்ப்பித்து இறைஞ்சி,Irainji - வணங்கி தாள் தாமரை அடைவோம் என்று,Thaal Thaamarai Adaivom Endru - அத்திருவடித்தாமரைகளை யடைவோமென்று தமர் ஆவார்,Thamar Aavaar - பக்தராயிருக்குமவர்கள் தாமரை மேலாற்கும்,Thamarai Melarkum - திருநாபிக் கமலத்திற் பிறந்த பிரமனுக்கும் ஆடு அரவு ஆர்த்தாற்கும்,Aadu Aravu Aartharkum - ஆடுகின்ற ஸர்ப்பங்களை (ஆபரணமாக உடம்பிலே) கட்டிக் கொண்டிருக்கும் சிவனுக்கும் அமரர்க்கும்,Amararukkum - நித்யஸூரிகளுக்கும் யாவர்க்கும்,Yaavarkkum - மற்றுமெல்லார்க்கும் அமரர்கள்,Amararhal - மேற்பட்டவராவர் |