Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2473 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2473நான்முகன் திருவந்தாதி || நான் கர்ப்ப வாசம் பண்ணும் போதே தொடங்கி ஸ்ரீ எம்பெருமான் என்னை ரஷித்திக் கொண்டு வருகையால் ஒரு காலும் அவனை மறந்து அறியேன் என்கிறார் – கர்ப்பத்திலே இருந்த நாள் தொடங்கி-ஸ்ரீ எம்பெருமான் என்னை நோக்கிக் கொண்டு போருகையாலே- என்றும் திரு இருந்த மார்பன் சிரீ தரனுக்கு-ஆளாகவும் பெற்று வ்யாமுக்தனானவனை-என் நெஞ்சிலே வைத்து-என்றும் ஒக்க நின்ற போதொடு இருந்த போதொடு வாசி அன்றிகே-மறந்து அறியேன் – என்கிறார்-ஜாயமான கடாஷம் பண்ணுகையாலே 92
என்றும் மறந்தறியேன் என்னெஞ்சத் தேவைத்து
நின்று மிருந்தும் நெடுமாலை – என்றும்
திருவிருந்த மார்பன் சிரீதரனுக் காளாய்,
கருவிருந்த நாள்முதலாக் காப்பு.
கரு இருந்த நாள் முதலா,Karun Irundha Naal Mudhala - (நான்) கர்ப்பத்திலிருந்த நாள் தொடங்கி
காப்பு,Kaappu - (எம்பெருமானாலே) ரக்ஷைபெற்றவனாகையாலே
திரு என்றும் இருந்த மார்வன் சிரீதரனுக்கு,Thiru Endrum Irundha Marvan Siritharanukku - பிராட்டி நித்யவாஸம் பண்ணப்பெற்ற திருமார்வை யுடைய அந்தத்திருமாலுக்கு
ஆள் ஆய்,Aal Aay - ஆட்பட்டவனாய்
நெடு மாலை,Nedu Maalai - (அந்த) ஸர்வேச்வரனை
என் நெஞ்சத்து,En Nenjaththu - என்னுடைய ஹ்ருதயத்திலே
வைத்து,Vaiththu - ஸ்தாபித்து
நின்றும் இருந்தும் என்றும்,Nindrum Irundhum Endrum - நிற்றல் இருத்தல் முதலிய எல்லா நிலைமைகளிலும்
மறந்தறியேன்,Marandharieen - மறவாமல் (அவனையே) சிந்திப்பவனா யிருக்கின்றேன்.