Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2474 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2474நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ எம்பெருமான் ரக்ஷித்து அருளியதை மறந்தறியேன் என்றும் நான் ஸ்ரீ எம்பெருமானுக்கு மங்களா சாசனம் பண்ணுவதை மறந்தறியேன் -என்றுமாம் – ரஷிக்கைக்கு உறுப்பான-ஸ்வாபாவிகமான சேஷி சேஷ பாவமான சம்பந்தத்தை யுடையவனே இஸ் சம்பந்தத்தை மெய்யாக அறிந்தவர்-உன்னை விடத் துணியார் -என்கிறார் 93
காப்பு மறந்தறியேன் கண்ணனே யென்றிருப்பன்
ஆப்பங் கொழியவும் பல்லுயிர்க்கும், – ஆக்கை
கொடுத்தளித்த கோனே குணப்பரனே, உன்னை
விடத்துணியார் மெய்தெளிந்தார் தாம்.
அங்கு,Angu - அந்தப் பிரளய காலத்தில்
பல் உயிர்க்கும்,Pal Uyirkkum - எல்லா ஆத்மாக்களுக்கும்
ஆப்பு ஒழியவும்,Aappu Ozhiyavum - சரீரங்கள் அழிந்து போயிருந்தாலும் (மறுபடியும்)
ஆக்கை கொடுத்து,Aakkai Koduthu - சரீரங்களைக் கொடுத்து
அளித்த,Alitha - அருள்செய்த
கோனே,Kone - ஸ்வாமிந்!
காப்பு,Kaappu - (நீ செய்தருளும்) ரக்ஷைணை
மறந்தறியேன்,Marandharieen - ஒருநாளும் மறக்கமாட்டேன்
கண்ணனே என்று இருப்பன்,Kannane Endru Iruppan - எல்லாம் கண்ணனே என்று உறுதிகொண்டிருப்பேன்
குணம்,Gunam - திருக்குணங்களினால்
பரனே,Parane - சிறந்த பெருமானே!
மெய் தெளிந்தார் தாம்,Mei Thelindhaar Thaam - உள்ளபடி (ஸ்வரூபத்தைத்) தெளிவாக அறிந்தவர்கள்
உன்னைவிட துணியார்,Unnaividha Thuniyaar - உன்னை விட மாட்டார்கள்.