| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2475 | நான்முகன் திருவந்தாதி || சீலமில்லாச் சிறியேனாயினும் அடியேன் பக்கல் அருள் செய்ய வேண்டும் – குற்றமே வடிவாக உள்ளவர்களை இகழ்ந்து ஒழிய வேண்டுமே அன்றி கைக் கொள்வது தகாது என்று திரு உள்ளம் பற்றலாகாது – வேப்பிலை கைக்கும் என்றாலும் இத்தை கறியாகச் சமைத்து உட் கொள்ள வேணும் என்னும் விருப்புடையார்க்கு அது கறி யாகும் அன்றோ -அப்படியே தெரிந்தவர்கள் என்னைக் கைக் கொள்ளுவார்கள் – மெய் தெளிந்தார் என் செய்யார் –எது நினைத்தாலும் செய்யக் கூடியவர்களே அடியேனுடைய குற்றங்களை நற்றமாகவே கொண்டோ -அல்லது அவற்றில் திருக் கண் செலுத்தாமலோ அடியேனை விஷயீ கரித்து அருள வேணும் – அத்யந்த ஹேயன் ஆகிலும்-என்னை விஷயீ கரித்து அருள வேணும் என்னிலும் தண்ணி யாரையும்-யதிவா ராவணஸ்வயம்-என்னும்படியே வஸ்து ஸ்த்திதி அழகியதாக அறியுமவர்கள் என்றும்-விஷயீ கரிக்கப் படுமவர் என்கிறார்- 94 | மெய்தெளிந்தா ரெஞ்செய்யார்? வேறானார் நீறாக கைதெளிந்து காட்டிக் களப்படுத்து, பைதெளிந்த பாம்பின் ஆனையாய். அருளாய் அடியேற்கு வேம்பும் கறியாகும் ஏன்று. | வேறு ஆனார்,Veeru Aanaar - வேறுபட்டவர்களான (பகைவர்களான) துரியோதநாதிகள் நீறு ஆக,Neeru Aaga - சாம்பலாய் ஒழிந்து போம்படியாக தெளிந்து,Thelindhu - (ஆச்ரித விரோதிகளைக் கொல்லுதல் தருமமே என்று) தேறி தெளிந்த பை பாம்பு இன்அணையாய்,Thelindha Pai Paambu Inanaiyaai - விளங்குகின்ற படங்களை யுடைய ஆதிசேஷனாகிற இனிமையான படுக்கையைச் சென்று சேர்ந்த பிரானே! அடியேற்கு,Adiyeerkku - அடியேனுக்கு அருளாய்,Arulaai - அருள்புரிய வேணும் என்று,Endru - வேணுமென்று விரும்பினால் கைகாட்டி,Kaik Kaatti - (பாண்டவர்களுக்கு) வேண்டிய உதவிகளைச் செய்து களம படுத்து,Kalama Paduthu - (அந்த எதிரிகளைப் போர்களத்தில் கொன்றொழித்து) (இவ்வகையாலே மண்ணின்பாரம் நீக்கி) வேம்பும் கறி ஆகும்,Vembum Kari Aagum - வேப்பிலையும் கறியாகச் சமைத்துக் கொள்ள கூடியதே மெய் தெளிந்தார்,Mei Thelindhaar - உள்ளதை உள்ளபடியறியுமவர்கள் என் செய்யார்,En Seyyaaar - எதுதான் செய்யமுடியாதவர்கள் (எது நினைத்தாலும் செய்யக்கூடியவர்களே) |