திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2476 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2476நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ திரு நாட்டில் சேருவதற்கு பாங்காக-பரம பக்தி நிரம்பப் பெற்றேன்- மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே -என்றால் போலே – வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம் என்றுமாம் – ப்ரஹ்மாதிகளுக்கு என்னைக் கண்டால் கூச வேண்டும் படி-ஜ்ஞான பக்திகளாலே பூரணன் ஆனேன்- அதுக்கு மேலே புண்ய பலம் புஜிக்கும்-ஸ்வர்க்காதி லோகங்களையும்-புண்யார்ஜனம் பண்ணும் பூமியையும் உபேஷித்து அவற்றில் விலஷணமாய் இடமுடைத்தான-ஸ்ரீ வைகுண்டம் காணலாம்படி இப்போது பரபக்தி யுக்தனானேன் என்கிறார்- 95
ஏன்றேன் அடிமை இழிந் தேன் பிறப்பிடும்பை ஆன்றேன் அமரர்க் கமராமை, – ஆன்றேன் கடன்நாடும் மண்ணாடும் கைவிட்டு,மேலை இடநாடு காண இனி.
பதவுரை Show / Hide
அடிமை,Adimai - அடிமையை
என்றேன்,Endraen - ஏற்றுக் கொண்டேன்
பிறப்பு இடும்பை,Pirappu Idumbai - ஸம்ஸாரதுக்கங்களில் நின்றும்
இழிந்தேன்,Izhindhen - நீங்கினேன்
அமரர்க்கு,Amarar Kku - பிரமன் முதலிய தேவர்களுக்கும்
அமராமை,Amaramai - என் அருகு நாடாவெண்ணாதபடி
ஆன்றேன்,Aandren - (ஞானம் பக்தி முதலிய வற்றால்) நிரம்பினேன்
கடன்நாடும்,Kadannaadum - ஸ்வர்க்கம் முதலிய லோகங்களையும்
மண் நாடும்,Man Naadum - இப்பூலோகத்தையும்
கை விட்டு,Kai Vittu - உபேக்ஷித்து
மேலே,Mele - எல்லாவற்றுக்கும் மேற்பட்டுள்ளதாய்
இடம்,Idam - (அடியார்கள் குழாங்களுக்குத் தகுதியாக) இட முடைத்தான்
நாடு,Naadu - திருநாட்டை
காண,Kaan - கண்டு அநுபவிக்கலாம்படி
இனி,Ini - இப்போது
ஆன்றேன்,Aandren - (பரம பக்தி) நிரம்பப் பெற்றேன்