| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2476 | நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ திரு நாட்டில் சேருவதற்கு பாங்காக-பரம பக்தி நிரம்பப் பெற்றேன்- மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே -என்றால் போலே – வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம் என்றுமாம் – ப்ரஹ்மாதிகளுக்கு என்னைக் கண்டால் கூச வேண்டும் படி-ஜ்ஞான பக்திகளாலே பூரணன் ஆனேன்- அதுக்கு மேலே புண்ய பலம் புஜிக்கும்-ஸ்வர்க்காதி லோகங்களையும்-புண்யார்ஜனம் பண்ணும் பூமியையும் உபேஷித்து அவற்றில் விலஷணமாய் இடமுடைத்தான-ஸ்ரீ வைகுண்டம் காணலாம்படி இப்போது பரபக்தி யுக்தனானேன் என்கிறார்- 95 | ஏன்றேன் அடிமை இழிந் தேன் பிறப்பிடும்பை ஆன்றேன் அமரர்க் கமராமை, – ஆன்றேன் கடன்நாடும் மண்ணாடும் கைவிட்டு,மேலை இடநாடு காண இனி. | அடிமை,Adimai - அடிமையை என்றேன்,Endraen - ஏற்றுக் கொண்டேன் பிறப்பு இடும்பை,Pirappu Idumbai - ஸம்ஸாரதுக்கங்களில் நின்றும் இழிந்தேன்,Izhindhen - நீங்கினேன் அமரர்க்கு,Amarar Kku - பிரமன் முதலிய தேவர்களுக்கும் அமராமை,Amaramai - என் அருகு நாடாவெண்ணாதபடி ஆன்றேன்,Aandren - (ஞானம் பக்தி முதலிய வற்றால்) நிரம்பினேன் கடன்நாடும்,Kadannaadum - ஸ்வர்க்கம் முதலிய லோகங்களையும் மண் நாடும்,Man Naadum - இப்பூலோகத்தையும் கை விட்டு,Kai Vittu - உபேக்ஷித்து மேலே,Mele - எல்லாவற்றுக்கும் மேற்பட்டுள்ளதாய் இடம்,Idam - (அடியார்கள் குழாங்களுக்குத் தகுதியாக) இட முடைத்தான் நாடு,Naadu - திருநாட்டை காண,Kaan - கண்டு அநுபவிக்கலாம்படி இனி,Ini - இப்போது ஆன்றேன்,Aandren - (பரம பக்தி) நிரம்பப் பெற்றேன் |