| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2477 | நான்முகன் திருவந்தாதி || நிர்ஹேதுகமாக ரஷிக்கும் ஸ்வ பாவனாய்-அதுக்கடியான சேஷியான ஸ்ரீ மன் நாராயணன் நீ நன்கு அறிந்தேன் நான்-இப்பொருள் எனக்கு அழகியதாக கை வந்தது என்கிறார்- சகல பிரபஞ்சத்துக்கும் காரணனான ஸ்ரீ நாராயணனே பர தெய்வம் என்று முதல் பாட்டிலே ப்ரதிஜ்ஜை பண்ணி சுருதி ஸ்ம்ருதி இதிகாசம் நியாயம் இவற்றாலும் -ஸ்ரீ யபதித்தவாதி சின்னங்களாலும் அத்தையே நெடுக உபபாதித்திக் கொண்டு வந்து அடியில் பண்ணின ப்ரதிஜ்ஜைக்குத் தகுதியாக ஸ்ரீ மன் நாராயண பரத்வத்தை நிலை நாட்டித் தலைக் கட்டுகிறார் தேவதாந்த்ர பரத்வ ப்ரமத்தை தவிர்த்து ஸ்ரீ மன் நாராயணன் இடத்திலே பரத்வத்தை ஸ்தாபிப்பதிலேயே இப்பிரபந்தத்தின் முழு நோக்கு – 96 | இனியறிந்தே னீசற்கும் நான்முகற்கும் தெய்வம் இனியறிந்தேன் எம்பெருமான். உன்னை – இனியறிந்தேன் காரணன்நீ கற்றவைநீ கற்பவைநீ, நற்கிரிசை நாரணன்நீ நன்கறிந்தேன் நான். | எம்பெருமான்,Emperumaan - எம்பெருமானே! உன்னை,Unnai - உன்னை ஈசற்கும்,Eesarkkum - ருத்ரனுக்கும் நான் முகற்கும்,Naan Mukarkkum - பிரமனுக்கும் தெய்வம்,Deivam - தெய்வமாக இனி அறிந்தேன் இனி அறிந்தேன்,Ini Arindhen Ini Arindhen - இப்போது திட்டமாகத் தெரிந்து கொண்டேன் காரணன் நீ,Kaaranan Nee - ஸகலஜகத்துக்கும் காரணபூதன் நீ கற்றவை நீ,Kattravai Nee - இதற்கு முன்பு அறியப்பட்ட பொருள்களெல்லாம் நீ கற்பவை நீ,Karppavai Nee - இனிமேலறியப்படும் பொருள்களும் நீ (என்கிற இதனையும்) நல் கிரிசை,Nal Kirisai - நிர்ஹேதுகரக்ஷண மாகிற நல்ல வ்யாபாரத்தை யுடையனான நாரணன் நீ,Naaranan Nee - நாராயணன் நீ நான் நன்கு அறிந்தேன்,Naan Nangu Arindhen - நான் நன்றாகத் தெரிந்து கொண்டேன் |