| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2478 | திருவிருத்தம் || ஆழ்வார் தம்முடைய ஞானக் கண்ணுக்கு இலக்கண எம்பெருமானை நோக்கி விண்ணப்பம் செய்கிறார் இனி யாம் உறாமை -பன்மையிலும் – அடியேன் -ஒருமையில் -பர அநர்த்தம் நெஞ்சில் படுகையாலே நாட்டுக்காகத் தாம் மன்றாடுகிறார் – 1 | பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான் எந்நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே | உயிர் அளிப்பவன், Uyir Alippavan - எல்லாப் பிராணிகளையும் ரக்ஷித்தருள்வதற்காக நின்ற யோனியும் ஆய், Nindra Yoniyum Aay - பலவகைப்பட்ட பிறப்புகளையுடையனால் பிறந்தாய், Pirandhai - திருவவதரித்தவனே! இமையோர் தலைவா, Imaiyor Thalaivaa - தேவர்களுக்குத் தலைவனே! பொய் நின்ற ஞானமும், Poi Nindra Naanamum - பொய்ம்மை நிலைபெற்ற அறிவும் பொல்லா ஒழுக்கமும், Pollaa Ozhukkamum - தீய நடத்தையும் அழுக்கு உடம்பும், Azhukku Udamum - அசுத்தங்களோடு கூடின சரீரமும் (ஆகிய இவற்றோடு கூடி) இ நின்ற நீர்மை, I Nindra Neermai - இவ்வண்ணமான இயல்வை (பிறப்புத் துன்பத்தை) அடியேன் செய்யும் மெய் விண்ணப்பம், Adiyen Seyyum Meiya Vinnappam - (உனது) அடியனாகிய யான் சொல்லும் உண்மையான விஜ்ஞாபகத்தை நின்று கேட்டருளாய், Nindru Kaettarulai - நின்று நீ கேட்டருள வேணும். |