| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2480 | திருவிருத்தம் || கருடாரூடனாக சேவை சாதிக்க -பெரிய திருவடி செய்த போக்யமே போக்யம்–சதா திருமாலை ஏந்திச் செல்கிறான் என்று ஆழ்வார் திரு உள்ளம் பெரிய திருவடி பின்னே பரம பதம் வரை சென்று -பிராட்டிமார் உடன் சேர்த்தி அழகைக் கண்டு மூவரும் அவனுக்கு நிழல் போலே இருப்பதைக் கண்ட பின் —தொடருவதால் அவனது குளிர்ச்சிக்கு காரணம் என்பதாலும் நிழல் தம்மில் ஒருவர்க்கு ஒருவர் நிழல் என்றுமாம் – அடியார்க்கு நிழல் போல்வனர் என்றுமாம் — 3 | குழற் கோவலர் மடப்பாவையும் மண் மகளும் திருவும் நிழற் போல்வனர் கண்டு நிற்கும் கொல் மீளும் கொல் தண்ணம் துழாய் அழற்போல் அடும் சக்கரத் தண்ணல் விண்ணோர் தொழக் கடவும் தழற் போல் சினத்த அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே | தண் அம் துழாய், Than Am Thuzhai - குளிர்ந்த அழகிய திருத் துழாயை யுடையவனும் அழல் போல் அடும் சக்ரத்து, Azhai Pol Adum Chakrathu - (அஸுர ராக்ஷஸர்களை) நெருப்புப் போல் அழிக்கின்ற திருவாழியை யுடையனுமான அண்ணல், Annal - எம்பெருமான் விண்ணோர் தொழ கடவும், Vinnor Thozha Kadavum - மேலுலகத்தவர் வணங்கும்படி ஏறி நடத்துகிற தழல்போல் சினத்த, Thazhal Pol Sinath - பள்ளின் பின்போன தனி நெஞ்சம், Thani Nenjam - (எனது) தனிப்பட்ட மனமானது குழல்கோவலர், Kuzhalkovalar - புல்லாங்குழலை யுடையரான இடையரது மடம் பாவையும், Madham Pavaiyum - குணவதியான மகளாகிய நப்பின்னைப் பிராட்டியும் மண் மகளும், Man Magalum - பூமிப்பிராட்டியும் திருவும், Thiruvum - பெரிய பிராட்டியும் நிழல் போல்வனர், Nizhal Polvannar - (எம்பெருமானுக்கு) நிழல் போலேயிருக்க அவர்களை கண்டு நிற்கொல், Kandu Nirkol - பார்த்துக் கொண்டு (அவ்விடத்தை விடாதே) நிற்குமோ? மீளும் கொல், Meelum Kol - திரும்பி வருமோ? |