| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2481 | திருவிருத்தம் || அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சம் -பிராமண பூர்வகமாக எம்பெருமான் பின் சென்று தளர்ந்து இருக்கும் பொழுது- தனி நெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது -என்று அத்தையே ஸ்திரப்படுத்தி அருளி குளிர்ந்த காற்றும் அவன் திருத் துழாய் -சம்பந்தம் கொண்டு நலியும் படியை சொல்லி – பாக்ய பதார்த்தங்கள் இனி தம்மை ஹிம்சிப்பதை வெளியிட்டு அருளுகிறார் 4 | தனி நெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது தண்ணம் துழாய்க் கினி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம் நீ நடுவே முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப் பனி நஞ்ச மாருதமே எம்மதாவி பனிப்பியல்வே | தனி நெஞ்சம், Thani Nenjam - (என்னோடு) உறவற்று நீங்கிய (என்) மனம் முழுவதையும் முன், Mun - முன்னமே அவர் புள்ளே, Avar Pulle - அப்பெருமானுடைய கருடப் பறவையே கவர்ந்தது, Kavarnthathu - (பிறர்க்கு மிச்சமில்லாதபடி) கவர்ந்து கொண்டு போயிற்று. (ஆதலால்,) தண் அம் துழாய்க்கு, Than Am Thuzhaikku - (அப்பெருமானுடைய) குளிர்ந்த அழகிய திருக் குழாய்க்கு கவர்வது, Kavarnthathu - கவர்ந்து கொண்டு போவதற்கு உரியதான நெஞ்சம், Nenjam - வேறொரு நெஞ்சை இனி இங்கு யாம் இலம், Ini Ingu Yaam Ilam - இனி இவ்விடத்தில் யாம் உடையோ மல்லோர், (அப்படியிருக்க.) முனி, Muni - கோவிக்குத் தன்மையுள்ள வஞ்சம் பேய்ச்சி, Vanjam Paeychchi - வஞ்சனையையுடைய பேய் மகளான பூதனையினுடைய முலை, Mulai - (விஷந்தடவின) முலையை சுவைத்தான், Suvaiththan - (பசையற) உருசி பார்த்து உண்ட கண்ணபிரானுடைய முடிசூடும் துழாய், Mudichoodum Thuzhai - திருமுடியில் சூடப்பட்ட திருத்துழாயினது பனி நஞ்சம் மருதமே, Pani Nanjam Maruthame - குளிச்சியை யுடைய விஷம் போன்ற காற்றே! நீ நடுவே, Nee Nadhuvae - நீ இடையிலே (புகுந்து) எம்மது ஆவி பனிப்பு, Emmathu Aavi Panippu - (ஏற்கனவே நோவு பட்டிருக்கிற) எம்முடைய உயிரை மேலும் நடுங்கச் செய்வது இயல்பே, Iyalthae - (உனக்குத் தக்க) இயற்கையோ? (தகாது.) |