Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2482 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2482திருவிருத்தம் || மந்த மாருதம் பராங்குச நாயகிக்கு தாபத்தை உண்டாக்கக் கடவது -என்றே சங்கல்பித்தான் போலும் – என்று தோழி இரங்குகிறாள்- பெரிய திருவடியைக் கொண்டு நெஞ்சம் கவர்ந்த அனந்தரம் வாடையை அனுப்பி மேனி நிறத்தை கவர – மாமைத் திறத்துக் கொலாம் பனிப்புயல் வண்ணன் -வடிவும் ஸ்வபாவமும் மேகம் போல் இருக்க இப்படி விருத்த சங்கல்பம் பண்ணுவதே 5
பனிப்பியல்வாக உடைய தண் வாடை இக்காலம் இவ் ஊர்ப்
பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து எரி வீசும் அம்தண் அம் துழாய்
பனிப்புயல் சோரும் தடங்கண்ணி மாமைத் திறத்துக் கொலாம்
பனிப்புயல் வண்ணன் செங்கோல் ஒருநான்று தடாவியதே
பனிப்பு இயல்பு ஆக உடைய, Panippu Iyalthbu Aaga Udaiya - குளிரச் செய்வதையே இயற்கை தொழிலாக வுடைய
தண் வாடை, Than Vaadai - குளிர்ந்த காற்றானது
இ காலம், I Kaalam - இப்போது மாத்திரம்
இ ஊர், I Oor - இவ்விடத்தில் மாத்திரம்
பனிப்பு இயல்பு எல்லாம் தவிர்த்து, Panippu Iyalthbu Ellam Thavirthu - குளிரச் செய்வதாகிய (தன்னுடைய) இயற்கையை முழுதும் விட்டு
அம் தண்ணம் நுழாய், Am Thannam Nuzhai - அழகிய குளிர்ந்த (அவனது, திருத்துழாயின் விஷயமாக (ஆசைப்பட்டு)
பனி புயல் சோரும், Pani Puyal Soorum - மழை துளித்தலை யுடைய மேகம் போல நீர் சொரிகிற
எரி வீசும், Eri Veesum - வெப்பத்தை வீசுகின்றது; (இவ்விதமாக)
பனி புயல் வண்ணன், Pani Puyal Vannan - குளிர்ந்த காளமேகம் போன்ற தன்மையையுடைய எம்பெருமானது
செங்கோல், Sengkol - (என்றும் மாறாத) கட்டளை
ஒரு நான்று தடாவியது, Oru Naantru Thadaviya - இவ்வொரு காலத்தில் கோணலாய்ப் போனது,
தட கண்ணி, Thada Kanni - பெரிய கண்களையுடைய இவளது
மாமை திறத்து கொல்லும், Maamai Thirathu Kollum - மேனி நிறத்தை யழிப்பதற்கோ போலும்