| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2482 | திருவிருத்தம் || மந்த மாருதம் பராங்குச நாயகிக்கு தாபத்தை உண்டாக்கக் கடவது -என்றே சங்கல்பித்தான் போலும் – என்று தோழி இரங்குகிறாள்- பெரிய திருவடியைக் கொண்டு நெஞ்சம் கவர்ந்த அனந்தரம் வாடையை அனுப்பி மேனி நிறத்தை கவர – மாமைத் திறத்துக் கொலாம் பனிப்புயல் வண்ணன் -வடிவும் ஸ்வபாவமும் மேகம் போல் இருக்க இப்படி விருத்த சங்கல்பம் பண்ணுவதே 5 | பனிப்பியல்வாக உடைய தண் வாடை இக்காலம் இவ் ஊர்ப் பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து எரி வீசும் அம்தண் அம் துழாய் பனிப்புயல் சோரும் தடங்கண்ணி மாமைத் திறத்துக் கொலாம் பனிப்புயல் வண்ணன் செங்கோல் ஒருநான்று தடாவியதே | பனிப்பு இயல்பு ஆக உடைய, Panippu Iyalthbu Aaga Udaiya - குளிரச் செய்வதையே இயற்கை தொழிலாக வுடைய தண் வாடை, Than Vaadai - குளிர்ந்த காற்றானது இ காலம், I Kaalam - இப்போது மாத்திரம் இ ஊர், I Oor - இவ்விடத்தில் மாத்திரம் பனிப்பு இயல்பு எல்லாம் தவிர்த்து, Panippu Iyalthbu Ellam Thavirthu - குளிரச் செய்வதாகிய (தன்னுடைய) இயற்கையை முழுதும் விட்டு அம் தண்ணம் நுழாய், Am Thannam Nuzhai - அழகிய குளிர்ந்த (அவனது, திருத்துழாயின் விஷயமாக (ஆசைப்பட்டு) பனி புயல் சோரும், Pani Puyal Soorum - மழை துளித்தலை யுடைய மேகம் போல நீர் சொரிகிற எரி வீசும், Eri Veesum - வெப்பத்தை வீசுகின்றது; (இவ்விதமாக) பனி புயல் வண்ணன், Pani Puyal Vannan - குளிர்ந்த காளமேகம் போன்ற தன்மையையுடைய எம்பெருமானது செங்கோல், Sengkol - (என்றும் மாறாத) கட்டளை ஒரு நான்று தடாவியது, Oru Naantru Thadaviya - இவ்வொரு காலத்தில் கோணலாய்ப் போனது, தட கண்ணி, Thada Kanni - பெரிய கண்களையுடைய இவளது மாமை திறத்து கொல்லும், Maamai Thirathu Kollum - மேனி நிறத்தை யழிப்பதற்கோ போலும் |