| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2484 | திருவிருத்தம் || கால மயக்கு – காலம் மறைத்து உரைத்தல் இது என்பர் திருக்கோவையாரில் 7 | ஞாலம் பனிப்பச் செறித்து நன்னீரிட்டுக் கால் சிதைந்து நீல வல்லேறு பொரா நின்ற வானமிது திருமால் கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூம் காலம் கொலோ வறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே | ஞாலம் பனிப்ப, Njaalam Panippa - உலகம் நடுங்கும்படி செறித்து, Seriththu - தம்மில் தாம் நெருங்கி நல் நீர் இட்டு, Nal Neer Ittu - (தம் உடம்பின்) நீரை நன்றாக வெளிச் சிந்தி கால் சிதைந்து, Kaal Sithaindhu - கால்களால் தரையைக் கீறிக் கொண்டு நீலம் வல் ஏறு, Neelam Val Aeru - கரிய வலிய எருதுகள் பொரா நின்ற, Poraa Nindra - போர் செய்யப் பெற்ற வானம் இது, Vaanam Ithu - ஆகாசமாகும் இது; திருமால், Thirumaal - எம்பெருமானுடைய கோலம் சுமந்து, Kolam Sumandhu - வடிவத்தை யுடையதாய் பிரிந்தார் கொடுமை குழறு, Pirindhaar Kodumai Kuzhru - பிரிந்து போன நாயகனது கொடுந்தன்மையைக் கூறுகிற தண் பூ காலம் கொல் ஓ, Than Poo Kaalam Kol O - குளிர்ந்த அழகிய கார் காலத்தானோ? வினையாட்டியேன், Vinaiyaattiyeen - தீவினையுடைய நான் காண்கின்ற, Kaankindra - காண்கின்றவற்றை அறியேன், Ariyyeen - இன்னதென்று அறிகிற வில்லை. |