| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2485 | திருவிருத்தம் || பொருள் வயின் -நிமித்தமாக -பிரிவு துறை பரிபூர்ண உத்தம புருஷன் தலைமகனாய் இருக்க-தேசாந்தத்துக்குப் -பொருள் தேடிப்போக வேணுமோ ஸ்வ ஆர்ஜித பொருள்கள் கொண்டே பித்ரு தேவ கார்யங்கள் செய்து அவர்களுக்குப் ப்ரீதி ஏற்படுத்த வேணுமே 8 | காண்கின்றனகளும் கேட்கின்றகளும் காணில் இந்நாள் பாண் குன்ற நாடர் பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம் மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்தும்பர் நம்பும் சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே | குன்றம் நாடர், Kundram Naadar - மலைகளை யுடைத்தான நாட்டுக்குத் தலைவரான நாயகர் இ நாள், I Naal - இன்றை தினத்தில் பயில்கின்றன, Payilkindrana - பலவாறாக நடத்துகின்றவையான காண்கின்றனகளும், Kaankindranaagalum - காணப்படுகிற செய்கைகளும் கேட்கின்றனகளும், Kedkindraangalum - கேட்கப்படுகின்ற சொற்களும் காணில், Kaanil - ஆராய்ந்து பார்க்குமிடத்து பாண், Paan - வெளியுபசார மாத்திரமாம்; இது எல்லாம், Idhu Ellam - இந்த மிக்க உபசாரமெல்லாம் மாண் குன்றம் ஏந்தி, Maan Kuntram Aendhi - மாட்சிமை தங்கிய கோவர்த்ததன கிரியை நினைப்பின்றி யெடுத்த கண்ணபிரானது தண் மாமலை வேங்கடத்து, Than Maamalai Vengadathu - குளிர்ந்த சிறந்த திருவேங்கடமலையின் உம்பர் நம்பும், Umbar Nambum - மேலுலகத்தாரால் விரும்பப்படுகிற உயர்ந்த சிகரத்தை சென்று, Sendru - போய் அடைந்து பொருள் படைப்பான், Porul Padaippaan - (அங்கும்) பொருளீட்டும் பொருட்டு கற்ற, Katra - (புதிதாக) அப்யஸித்த திண்ணளவு, Thinnalavu - வலிமையின் செயல் (என்று) அறிந்தோம், Arindhom - தெரிந்து கொண்டோம். |