Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2486 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2486திருவிருத்தம் || கையும் திருவாழியுமான சேர்த்தியால் உண்டான அழகுடன் ஸ்ரீ வைகுண்டம் போலே சேர்ந்தவர் மீள ஒண்ணாத எல்லை இல்லா ஆனந்தம் கொடுக்கும் பராங்குச நாயகி 9
திண் பூஞ்சுடர் நுதி நேமி யஞ்செல்வர் விண்ணாடனைய
வண் பூ மணி வல்லி யாரே பிரிபவர் இவையோ
கண் பூங்கமலம் கருஞ்சுடராடி வெண் முத்தரும்பி
வண் பூங்குவளை மடமான் விழிக்கின்ற மாயிதழே
திண், Thin - வலிய
பூ, Poo - அழகிய
சுடர், Sudar - ஒளியுள்ள
நுதி, Nuthi - கூர்மையை யுடைத்தான
நேமி, Nemi - திருவாழியை யுடைய
அம் செல்வர், Am Selvar - அழகிய எல்லா ஐசுவரியங்களையுமுடைய எம்பெருமானது
விண் நாடு அனைய, Vin Naadu Anaiya - பரமபதத்தை யொத்த
வண் மணி பூ, Van Mani Poo - அழகிய சிறந்த பூங்கொடி போன்றவளை (ஏனெனில்;)
இவையோ கண், Ivaiyo Kan - இவளது கண்கள் கண்களாக மாத்திரமிருக்கின்றனவோ?
பூ கமலம், Poo Kamalam - தாமரை மலர்களாய்
வண் பூ குவளை, Van Poo Kuvalai - அழகிய செங்கழு நீர் மலர்களுமாய்
மா இதழ், Maa Idazh - பெரிய இதழ்களை யுடையவையாய்
கரு சுடர் ஆடி, Karud Sudar Aadi - கரிய (அஞ்சனத்தின்) ஒளியை அணிந்து
வெண் முத்து அரும்பி, Ven Muthu Arumbi - (நம்மைப் பிரிதலாற்றுமையாலுண்டான கண்ணீராகிற) வெளுத்த முத்துக்கள் தோன்றப் பெற்று
மடமான் விழிக்கின்ற, Madamaan Vizhikkindra - மடத்தை யுடைய மான் போல நோக்குகின்றன.