| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2486 | திருவிருத்தம் || கையும் திருவாழியுமான சேர்த்தியால் உண்டான அழகுடன் ஸ்ரீ வைகுண்டம் போலே சேர்ந்தவர் மீள ஒண்ணாத எல்லை இல்லா ஆனந்தம் கொடுக்கும் பராங்குச நாயகி 9 | திண் பூஞ்சுடர் நுதி நேமி யஞ்செல்வர் விண்ணாடனைய வண் பூ மணி வல்லி யாரே பிரிபவர் இவையோ கண் பூங்கமலம் கருஞ்சுடராடி வெண் முத்தரும்பி வண் பூங்குவளை மடமான் விழிக்கின்ற மாயிதழே | திண், Thin - வலிய பூ, Poo - அழகிய சுடர், Sudar - ஒளியுள்ள நுதி, Nuthi - கூர்மையை யுடைத்தான நேமி, Nemi - திருவாழியை யுடைய அம் செல்வர், Am Selvar - அழகிய எல்லா ஐசுவரியங்களையுமுடைய எம்பெருமானது விண் நாடு அனைய, Vin Naadu Anaiya - பரமபதத்தை யொத்த வண் மணி பூ, Van Mani Poo - அழகிய சிறந்த பூங்கொடி போன்றவளை (ஏனெனில்;) இவையோ கண், Ivaiyo Kan - இவளது கண்கள் கண்களாக மாத்திரமிருக்கின்றனவோ? பூ கமலம், Poo Kamalam - தாமரை மலர்களாய் வண் பூ குவளை, Van Poo Kuvalai - அழகிய செங்கழு நீர் மலர்களுமாய் மா இதழ், Maa Idazh - பெரிய இதழ்களை யுடையவையாய் கரு சுடர் ஆடி, Karud Sudar Aadi - கரிய (அஞ்சனத்தின்) ஒளியை அணிந்து வெண் முத்து அரும்பி, Ven Muthu Arumbi - (நம்மைப் பிரிதலாற்றுமையாலுண்டான கண்ணீராகிற) வெளுத்த முத்துக்கள் தோன்றப் பெற்று மடமான் விழிக்கின்ற, Madamaan Vizhikkindra - மடத்தை யுடைய மான் போல நோக்குகின்றன. |