திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2488 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2488திருவிருத்தம் || இதுவரையில் நான் எத்தனையோ ஆச்சர்யங்கள் கண்டு இருக்கிறேன் ஆனால் இன்று காணும் ஆச்சர்யம் என்றைக்கும் காண முடியாது என்று அடங்கா வியப்புத் தோற்ற பாசுரம் தொடங்கும் போதே அரியன யாமின்று காண்கின்றன— இது போன்ற அதிசயம் முன்பு எங்கும் கண்டேன் இல்லையே -என்கிறான் மேல் முழுவதும் இந்த ஆச்சர்யத்தை விவரிக்கின்றான்- 11
அரியன யாமின்று காண்கின்றன கண்ணன் விண்ணனையாய் பெரியன காதம் பொருட்கோ பிரிவென ஞாலம் எய்தற் குரியன வொண் முத்தும் பைம் பொன்னுமேந்தி ஒரோ குடங்கைப் பெரியன கெண்டைக் குலம் இவையோ வந்து பேர்கின்றவே
பதவுரை Show / Hide
யாம் இன்று காண்கின்றன, Yaam Indru Kaankindrana - நாம் இப்பொழுது பார்க்கின்றவை
அரியன, Ariyan - (உலகத்தில் வேறு எங்கும் பார்ப்பதற்கு) அருமையானவை;
கண்ணன் விண் அணையாய், Kannan Vin Anaiyai - எம்பெருமானுடைய பரமபதம்போல அளவற்ற இன்பம் தருபவளே!
பெரியன காதம் பிரிவு, Periyan Kaadham Pirivu - அதிக தூரங்களான பலகாங்களில் (அவரவர்கள்) பிரிந்து போவதானது
பொருட்கோ, Porutko - பொருள் சம்பாதிப்பதற்காகவோ?’
என, En - என்று யான் (பொதுப்படையாக உலக நிகழ்ச்சியைப் பற்றிக் கேட்க (அவ்வளவிலே)
ஞாலம் எய்தற்கு உரியன, Njaalam Eydharku Uriyan - எல்லாவுலகங்களையும் தம் வசப்படுத்திக் கொள்ளக்கூடியவையாயும்
ஒரோ குடங்கைப் பெரியன, Oro Kudangaip Periyan - தனித்தனி ஒரு அகங்களையவ்வளவு பெரியவையாயுமுள்ள
கெண்டை குலம் இவை, Kendai Kulam Ivai - கெண்டை மீன்களின் இனமான இக்கண்கள்
ஒள் முத்தும் பை பொன்னும் ஏந்தி, Ol Muththum Pai Ponnum Aendhi - (பிரிவாற்றாமையால் வந்த கண்ணீர்த் துளிகளாகிய அழகிய முத்துக்களையும்
வந்து பேர்கின்ற, Vandhu Paerkindra - (என் முன்னே) வந்து உலாவுகின்றன;
ஓ, O - இது என்ன வியப்பு!.