| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2489 | திருவிருத்தம் || நாயகன் பிரியப்பெற்ற நாயகி தன் ஆற்றாமையைக் கூறி நெஞ்சோடு கலாய்த்தல் அன்றியே பாங்கியை நோக்கித் தலைமகள் தன் ஆற்றாமையை சொல்லுகிறாள் ஆகவுமாம் 12 | பேர்கின்றது மணியாமை பிறங்கி யள்ளல் பயலை ஊர்கின்றது கங்குலூழிகளே இதெல்லா மினவே ஈர்க்கின்ற சக்கரத் தெம்பெருமான் கண்ணன் தண்ணம் துழாய் சார்கின்ற நன்னெஞ்சினார் தந்து போன தனி வளமே | மணி மாமை, Mani Maamai - (எனது) அழகிய நிறமானது பேர்கின்றது, Paerkindrathu - விகாரப் படா நின்றது; பிறங்கி அள்ளல் பயலை, Pirangi Allal Payalai - விளங்கி அடர்தலை யுடைய பயலை நிறமானது ஊர்கின்றது, Oorkindrathu - மேன் மேல் பரவா நின்றது; கங்குல், Gangul - இராப் போது ஊழிகளே, Oozhigalai - அனேக கற்பங்களாக நின்றது; இது எல்லாம் இனவே, Idhu Ellam Inave - இத் தன்மையுள்ள இவை யெல்லாம் ஈர்க்கின்ற சக்கரத்து, Eerkkindra Chakkarathu - (கொடியோரை) அறத்திடுகிற திருவாழியை யுடைய எம்பெருமான் கண்ணன், Emperumaan Kannan - எனது தலைவனான கண்ணபிரானது தண் அம் துழாய், Than Am Thuzhai - குளிர்ந்த அழகிய திருத்துழாயிலே சார்கின்ற, Saarkindra - ஆசைப்பட்டுச் செல்கின்ற நல் நெஞ்சினார், Nal Nenjinnaar - (எனது) நல்ல மனம் தந்து போன, Thandu Poana - (தான் செல்கிற போது எனக்குக்) கொடுத்து விட்டுச் சென்ற தனி வளமே, Thani Valame - ஒப்பற்ற செல்வங்களாம். |