| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2491 | திருவிருத்தம் || நாயகன் நாயகியினது நன்மையைக் கொண்டாடி -நலம் பாராட்டு துறையில் அருளிச் செய்தது மூன்று காரணங்கள் அழகிலே ஈடுபட்டு பேசுவது விஸ்லேஷத்தில் தன்னுடைய தரிப்புக்கு நம்மைப் பிரிந்து நெடும்காலம் இருக்க மாட்டாமல் கடுக வந்திடுவார் என்று உணர நாயகியின் கண் அழகிலே ஈடுபட்டுப் பேசும் பாசுரம் இது 14 | ஈர்வன வேலும் அஞ்சேலும் உயிர் மேல் மிளிர்ந்து இவையோ பேர்வனவோ அல்ல தைவ நல்ல வேள் கணை பேரொளியே சோர்வன நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பூர் தேர்வன தைவம் அந் நீர கண்ணோ இச் செழும் கயலே | ஈர்வனவேலும், Eirvanvelum - (பகையைப்) பிளப்பனவான, வேல்கள் போலவும் அம் சேலும், Am Selum - அழகிய சேல்மீன்கள் போலவும் உள்ளனவான இவை, Ivai - இவை உயிர்மேல் மிளிர்ந்து, Uyirmeel Milirndhu - (எனது) உயிரை வசப்படுத்தும் பொருட்டு அதன் மேற்பாய்ந்து பேர்வனவோ அல்ல, Pervanavo Alla - (அதைவிட்டு) நீங்குவன அல்ல; தெய்வம், Deivam - தெய்வத் தன்மையை யுடைய நல், Nal - அழகிய வேள், Vel - மன்மதனுடைய கணை, Kanai - அம்புகளினுடைய பேர் ஒளிய, Per Oliya - சிறந்த ஒளியையே சோர்வன, Sorvan - தாம் வெளியிடுவன நீலம், Neelam - நீலமணியினுடைய சுடர், Sudar - ஒளியை விடு, Vidu - வீசுகின்ற மேனி, Meni - திருமேனியை யுடையனான அம்மான், Amman - எம்பெருமானது ஊர் விசும்பு, Oor Visumbu - திருநாடாகிய பரமபத்தை தேர்வன, Thervan - (தனக்கு, ஒப்பாகத்) தேடுந் தன்மையுடையன; இ செழு கயல், I Sezhu Kayal - கொழுதத் கயல் மீன்களென்று சொல்லத்தக்க இவை தெய்வம் அன்னீர கண்ணோ, Deivam Annira Kannno - (மோஹினியென்னும்) பெண் தெய்வத்தையொத்த உமது கண்ணோ, Kannno - கண்களோ? |