Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2498 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2498திருவிருத்தம் || தாமான தன்மையில் கிருஷ்ண அனுபவம் என்றே நம்பிள்ளை போல்வார் வியாக்யானித்து அருளுகிறார்கள் ஸ்நாநாசனம் அலங்காராஸனம் நித்ய விபூதியில் போஜ்யா ஸாஸனம் சயனா ஆஸனம் இங்கு தர்மி ஐக்யம் உண்டே 21
சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி வானோர்கள் நன்னீர்
ஆட்டி அம் தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்தி மிலேற்றுவன் கூன்
கூட்டிடை ஆடின கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே
அங்கு, Angu - பரமபதமாகிற அவ்விபூதியில்,
விண்ணோர்கள், Vinnorkal - நித்யஸூரிகள்
நல் நீர் ஆட்டி, Nal Neer Aatti - நன்றாகத் திருமஞ்சனம் ஸமர்ப்பித்து
அம் தூபம் தரா நிற்க, Am Thoopam Tharaa Nirka - அழகிய தூபத்தை ஸமர்ப்பித்துக் கொண்டு நிற்க, (அந்தத் தூபத்தினால் திருமுக மண்டலம் மறைந்திருக்கும் க்ஷணத்திலே)
ஓர் மாயையினால், Oru Maayaiyin Aal - (உனது) ஒப்பற்ற மாயவகையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்து, Eetiyavenney Thodu Unna Pothu - (இங்குத் திருவாய்ப் பாடியிலுள்ளார் நாள்தோறும் கடைந்து) சேர்ந்தவெண்ணெயை எடுத்து அமுது செய்ய விரும்பி வந்து
தூயன சூட்டு நல் மாலைகள் ஏந்தி, Thuyana Sootu Nal Maalaigal Aendhi - பரிசுத்தாமனவையாய் (உனக்குச்) சூட்டத்தக்கஅழகிய மாலைகளைக் கைகளில் ஏந்திக்கொண்டு நின்று
அடல் ஆயர்தம் கொம்பினுக்கு, Adal Aayartham Kombinukku - வலிமையையுடைய இடையரது குலத்திற் பிறந்த பூங்கொம்பு போன்றமகளான நப்பின்னையை மணஞ்செய்து கொள்வதற்காக
இமில், Imil - முசுப்பையுடைய
ஏறு, Eru - (ஏழு) எருதுகளினுடைய
வல் கூன் கோட்டிடை, Val Koon Kottidai - வலிய வளைந்த கொம்புகளின் நடுவிலே
கூத்து ஆடினை, Koothu Aadinai - கூத்தாடி யருளினாய்.