Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2501 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2501திருவிருத்தம் || பிரிவாற்றாத தலை மகள் நிலையை செவிலித் தாய் சொல்வது – எனது மகள் கண் கலக்கமுற்றாள் நெஞ்சம் அழியப் பெற்றாள் இவ்வளவுக்கும் மேலே இது ஏதாய் முடியுமோ என அஞ்சி உரைக்கின்றாள் – 24
இயல்வாயின வஞ்ச நோய் கொண்டுலாவும் ஒரோ குடங்கைக்
கயல்பாய்வன பெருநீர் கண்கள் தம்மொடும் ,குன்றம் ஒன்றால்
புயல்வாயின நிரை காத்த புள்ளூர்தி கள்ளூரும் துழாய்
கொயல்வாய் மலர் மேல் மனத்தொடு என்னாம் கொல் எம் கோல வளைக்கே
இயல்பு ஆயின, Iyalthu Aayina - இயற்கையானதும்
வஞ்சம், Vanjam - பிறரறியாதபடியுள்ளதுமான
நோய், Noi - காதல் நோயை
கொண்டு, Kondhu - உடையவையாய்
உலாவும், Ulaavum - (ஆற்றாமை மிகுதியால் எங்கும்) பரந்து பார்க்கிற
ஒரே குடங்கை கயல் பாய்வன பெருநீர் கண்கள் தம்மோடும், Oru Kudangai Kayal Paayvan Peruneer Kangkal Thammoodum - ஒவ்வொரு ஒவ்வொரு அகங்கை யளவாக வுள்ளவையும்கயல் மீன் போலப் பிறழ்வனவுமாகிய மிக்க நீர்ப் பெருக்கை யுடைய கண்களுடனும்
புயல் வாய், Puyal Vaai - (முன்பு) பெருமழை பெய்த காலத்து
குன்றம் ஒன்றால், Kundram Ondraal - கோவர்தன மலையினால்
இனம் நிரை காத்த, Inam Nirai Kaatha - பசுக் கூட்டங்களைப் பாதுகாத்தருளினவனும்
புள் ஊர்தி, Pul Oorthi - கருட வாகஹனனுமான கண்ணபிரானது
கள் ஊரும் துழாய், Kal Oorum Thuzhai - தேன் பெருகும் திருத்துழாயினுடைய
கொயல் வாய் மலர்மேல், Koyal Vaai Malarmel - பறிக்கப் படுதல் பொருந்தின பூவின் மேல் (ஆசைப்பட்டுச் சென்ற)
மனத்தொடு, Manaththodu - மனத்தோடும்
எம் கோல் வளைக்கு, Em Kol Valaikku - அழகிய வளையல்களையுடைய எமது மகளுக்கு
என் ஆம் கொல், En Aam Kol - (இன்னும்) என்ன நிலைமை நேருமோ?