திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2501 | திருவிருத்தம் || பிரிவாற்றாத தலை மகள் நிலையை செவிலித் தாய் சொல்வது – எனது மகள் கண் கலக்கமுற்றாள் நெஞ்சம் அழியப் பெற்றாள் இவ்வளவுக்கும் மேலே இது ஏதாய் முடியுமோ என அஞ்சி உரைக்கின்றாள் – 24 | இயல்வாயின வஞ்ச நோய் கொண்டுலாவும் ஒரோ குடங்கைக்
கயல்பாய்வன பெருநீர் கண்கள் தம்மொடும் ,குன்றம் ஒன்றால்
புயல்வாயின நிரை காத்த புள்ளூர்தி கள்ளூரும் துழாய்
கொயல்வாய் மலர் மேல் மனத்தொடு என்னாம் கொல் எம் கோல வளைக்கே | பதவுரை Show / Hideஇயல்பு ஆயின, Iyalthu Aayina - இயற்கையானதும் வஞ்சம், Vanjam - பிறரறியாதபடியுள்ளதுமான நோய், Noi - காதல் நோயை கொண்டு, Kondhu - உடையவையாய் உலாவும், Ulaavum - (ஆற்றாமை மிகுதியால் எங்கும்) பரந்து பார்க்கிற ஒரே குடங்கை கயல் பாய்வன பெருநீர் கண்கள் தம்மோடும், Oru Kudangai Kayal Paayvan Peruneer Kangkal Thammoodum - ஒவ்வொரு ஒவ்வொரு அகங்கை யளவாக வுள்ளவையும்கயல் மீன் போலப் பிறழ்வனவுமாகிய மிக்க நீர்ப் பெருக்கை யுடைய கண்களுடனும் புயல் வாய், Puyal Vaai - (முன்பு) பெருமழை பெய்த காலத்து குன்றம் ஒன்றால், Kundram Ondraal - கோவர்தன மலையினால் இனம் நிரை காத்த, Inam Nirai Kaatha - பசுக் கூட்டங்களைப் பாதுகாத்தருளினவனும் புள் ஊர்தி, Pul Oorthi - கருட வாகஹனனுமான கண்ணபிரானது கள் ஊரும் துழாய், Kal Oorum Thuzhai - தேன் பெருகும் திருத்துழாயினுடைய கொயல் வாய் மலர்மேல், Koyal Vaai Malarmel - பறிக்கப் படுதல் பொருந்தின பூவின் மேல் (ஆசைப்பட்டுச் சென்ற) மனத்தொடு, Manaththodu - மனத்தோடும் எம் கோல் வளைக்கு, Em Kol Valaikku - அழகிய வளையல்களையுடைய எமது மகளுக்கு என் ஆம் கொல், En Aam Kol - (இன்னும்) என்ன நிலைமை நேருமோ? |