| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2503 | திருவிருத்தம் || நகர் காட்டல் இப்பாட்டுக்கு அகத்துறை நடை இளைப்புத் துன்பம் தீர அதோ தெரிகிறதே அதுவே நம்முடைய நகர் என்று ஸாமீப்யம் தோன்றக் காட்டிச் சொல்வது தைவா தீனமாக பாலை நிலம் கடந்தோம் 26 | நானிலம் வாய் கொண்டு நன்னீர் அறம் என்று கோது கொண்ட வேனிலம் செல்வன் சுவைத் துமிழ் பாலை கடந்த பொன்னே கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்காவுதம் பூம்தேன் அலம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே | நால்நிலம், Naalnilam - (முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்னும்) நால்வகை நிலங்களையும் வாய்கொண்டு, Vaikondru - (தன் கிரண முகத்தாலே) வாயிற் பெய்து கொண்டு நன்னீர் அறமென்று, Nanneer Aramendru - ஸாரமான நீர்ப்பசை அறும்படிமென்று கோது கொண்ட, Kothu Konda - அஸாரமான பாகம் இது வென்று அறிந்த வேனில் அம் செல்வன், Venil Am Selvan - வெப்பத்தைத் தனக்குச் செல்வமாகவுடைய ஸூர்யன் சுவைத்து உமிழ், Suvaithu Umizh - உருகி பார்த்து வெறுத்துக் கழித்த பாலை, Palai - பாலை நிலத்தை கடந்த, Kadandha - தாண்டி வந்த பொன்னே, Ponne - பொன் போன்றவளே!. விண்ணோர், Vinnor - மேலுலகத்தோர் யாவரும் கால்நிலம் தோய்ந்து தொழும், Kaalnilam Thoyndhu Thozhum - (நிலந்தோய்தவில்லாத தமது) கால்கள் நிலத்தில் படியும்படிஇங்கு வந்து நிலைத்து நின்று வணங்கும்படியான கண்ணன் வெஃகா, Kannan Vekha - கண்ணபிரானது திவ்யதேசமான திருவெஃகாவானது உது, Uthu - அடுத்துள்ளது. அம் பூ தேன், Am Poo Then - அழகிய பூவையும் தேனையுமுடைய இள, Ila - இளமை மாறாத சோலை, Solai - சோலையானது அப்பாலது, Appaaladhu - அவ்விடத்துள்ளது.; எப்பாலைக்கும் சேமத்தது, Eppalaikkum Semaththadhu - (எது நமது) எல்லாத் துன்பங்களுக்கும் (மாறாய்) துன்பந்தருவதோரிடமாம். |