| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2505 | திருவிருத்தம் || 28 | தண் அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம் நடுவே வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் –வாள்வாய அலகால் புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா அருளாய் எண்ணம் துழாவும் இடத்து உளவோ பண்டும் இன்னன்ன | வள்வாய் அலகால், Valvai Alagal - கூர்மையான வாயின் நுனியினால் புள், Pul - பறவைகள் நந்து உழாமே, Nandhu Uzhaame - (தன்னிடத்துள்ள) சங்கைக்கோர்த்தாதபடி பொரு, Poru - அலைமோதுகிற வளை கொள்வது, Valai Kolvathu - (எமது) கை வளைகளைக் கொள்ளை கொள்ளா நின்றது யாம், Yaam - (உன்பக்கல் ஈடுபட்ட) நாம் இழப்போம், Izhappom - வளையை இழக்கிறோம்; (இப்படியிருக்க) ஓர் வாடை, Oor Vadai - (எமக்கும் தனக்கும் யாதொரு ஸம்பந்தமு மில்லாத காற்றானது. நடுவே, Naduvae - இடையே பிரவேசித்து நீர், Neer - காவிரி நீர் சூழ்ந்த திரு அரங்கா, Thiru Arangaa - ஸ்ரீரங்கமென்னுந் திருப்பதியை யுடையவனே! தண் அம் துழாய், Than Am Thuzhai - குளிர்ந்த அழகிய (உனது திருத்துழாயானது வண்ணம் துழாவி உலாவும், Vannam Thuzhaavi Ulaavum - (எமது) நாமை நிறத்தைக் கவர்ந்த பொருட்டுத் தடவித் தேடிக்கொண்டு ஸஞ்சரிக்கத் தொடங்குகின்றது. அருளாய், Arulai - (அதற்கு யாம் மாமை யிழக்காதபடி) வந்து சேர்ந்தருள வேணும்.எண்ணம் துழாவும் இடத்து (மனம் தடுமாறு மளவிலும்) பண்டும் இன்னன்ன உளவோ, Pandhum Innanna Ulavoo - முன்பும் இப்படிப்பட்ட (எம் நிலைமைகள் போன்ற) நிலைமைகள் (வேறு எங்கேனும்) உள்ளனவோ? |