| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2506 | திருவிருத்தம் || நாயகி அன்னப் பறவையை வெறுத்து உரைக்கும் பாசுரம் -அன்னமோடு அழிதல் துறை 29 | இன்னன்ன தூதெம்மை ஆள் அற்ற பட்டு இரந்தாள் இவள் என்று அன்னன்ன சொல்லாப் பெடையொடும் போய் வரும் நீலம் உண்ட மின்னன்ன மேனி பெருமான் உலகில் பெண் தூது செல்லா அன்னன்ன நீர்மை கொலோ? குடிச சீர்மையில் அன்னங்களே | குடிசீர்மை இல், Kudiseirmai Il - உயர்குடிப் பிறப்பால் வரும் சிறப்பு இல்லாத அன்னங்கள், Annangal - இவ்வண்ணப் பறவைகள் (எனன் செய்கின்றனவென்றால்) இவள், Ival - ‘இப்பராங்குச நாயகியானவள் ஆள் அற்றம் பட்டு, Aal Attram Pattu - (வேறு தனக்கு) ஆளில்லாமையால் இன்னன்ன தூது, Innanth Thoodhu - இப்படிப்பட்ட தூதராக எம்மை, Emmai - நம்மை இரந்தாள் என்று, Irandhaal Endru - குறைகூறி வணக்கத்தோடு வேண்டிக் கொண்டாள்’ என்றெண்ணி அன்னன்ன சொல்லா, Annanth Sollaa - அப்படிப்பட்ட தூதுமொழிகளை (த் தலைவனிடஞ் சென்று) சொல்லாமல் பேடையொடும் போய்வரும், Pedaidodum Poivarum - (தமக்கு இனிய) பெண் பறவைகளுடனே (மந்தகதியாக மகிழ்ச்சியோடு) உலாவித் திரிகின்றன; (இதற்குக் காரணம்) நீலம் உண்ட, Neelam Unda - நீலநிறத்தையுட்கொண்ட மின் அன்ன, Min Annan - மின்னல்போன்ற மேனி, Meni - திருமேனியை யுடைய பெருமான், Perumaan - எம்பெருமானுடையதான உலகில், Ulagil - உலகத்தில் பெண் தூது செல்லா, Pen Thoodhu Sellaa - பெண்களுக்காகத் தூது செல்வதில்லாத அன்னன்ன நீர்மை கொலோ, Annanth Neermai Koloo - அப்படிப்பட்ட தன்மையையுடைமையோ? |