திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2507 | திருவிருத்தம் || எம்பெருமானை இடைவிடாது நினைத்து இருக்கையிலும் அவனைச் சேர்ந்து அனுபவித்து ஆனந்திக்கப் பெறாமையால் உண்டான ஆற்றாமைத் துயரினும் அவனை மறந்து இருப்பதே நன்று என்று அன்பு மிகுதியால் வெறுப்புக் கொண்டு நெஞ்சை மீட்கப் பார்க்கிறார் 30 | அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரை கண்டால் என்னை சொல்லி அவர் இடை நீர்
இன்னும் செல்லீரோ இதுவோ தகவு என்று இசைமின்களே | பதவுரை Show / Hideஅன்னம் செல்வீரும், Annam Selveerum - (வானத்திற் பறந்து) செல்லுகிற அன்னப்பறவைகளாகிய உங்களையும் வண்டானம் செல்வீரும், Vandaanam Selveerum - (அப்படியே) செல்பவர்களாகிற வண்டானக் குருகுகளாகிய உங்களையும் தொழுது இரந்தேன், Thozhudhu Irandhen - யான் வணங்கிப் பிரார்த்திக்கின்றேன் (என்னவென்று எனில்;) முன்னம் செல்வீர்கள் மறவேன்மினோ, Munnam Selveergal Maravenminoo - உங்களுள் முன்னே செல்பவர்கள் (என் வேண்டுகோளை) மறவா தொழிவீராக கண்ணன் வைகுந்தனோடு, Kannan Vaikundhanodu - கிருஷ்ணவதாரஞ் செய்தருளினவனும் பரமபதத்துக்குத் தலைவனுமாகிய பெருமானுடைய என் நெஞ்சினாரை கண்டால், En Nenjinaraik Kandaal - (முன்பு போயிருக்கிற) எனது மனத்தை (அங்கு நீங்கள்) பார்த்தால் என்னைச் சொல்லி, Ennaich Solli - (அதற்கு நீங்கள்) என்னைக் குறிப்பிட்டுச் சொல்லி அவரிடை நீர் இன்னம் சொல்லீரோ, Avaridai Neer Innamm Sollirow - அவரிடத்து நீர் இன்னமும் போய்ச்சேராதிருக்கிறீரோ? இது தகவோ, Idhu Thagavoo - இது தகுதியோ? என்று இசைமின்கள், Endru Isaimingal - என்று சொல்லுங்கள் |