| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2508 | திருவிருத்தம் || வானத்தில் பறந்து செல்லும் அன்னம் முதலியவற்றைப் பரமபத நாதனுக்குத் தூதாகவும் மேகங்களை திருவேங்கடமுடையான் இடம் தூது விடுகிறாள் 31 | இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம் அம் பொன் மா மணிகள் திசைமின் மிளிரும் திரு வேம்கடத்து வன் தாட்சி மயம் மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே | அம்பொன், Ambon - அழகிய பொன்னும் மா மணிகள், Maa Manigal - சிறந்த ரத்னங்களும் திசை, Thisai - திக்குகள் தோறும் மின் மிளிரும், Min Milirum - மின்னல்போல ஒளி வீசப்பெற்று திருவேங்கடத்து, Thiruveengadathu - திருவேங்கட மலையினது மேகங்கள், Megangal - மேகங்களானவை தூது இசைமின்கள் என்று இசைத்தால், Thuthu Isaimingal Endru Isaitthal - (நீங்கள் எமக்காகத்) தூதுக்கு இசைந்து சென்று சொல்லுங்கள்’ என்று சொல்லி வேண்டினால் இசையிலம், Isaiyilam - (அதற்கு உடனே) உடன் பட்டுச் செல்லக் காண்கிறோமில்லை; வல்தாள் சிமயம் மிசை, Valthal Simayam Misai - வலிய அடிவாரத்தையுடைய சிகரத்தின் மேலே (சிகரத்தை நோக்கி). மின் மிளிரிய போவான், Min Miliriyap Povan - மின்னல்கள் விளங்கச் செல்லும் பொருட்டு வழிகொண்ட, Vazhikonda - பிரயாணப்பட்ட என் தலைமேல் அசைமின்கள் என்றால், En Thalaimel Asaimingal Endraal - நீங்கள் என் தலையின்மேல் பொருந்துங்கள் என்று வேண்டினால் அசையும் கொல் ஆம், Asaiyum Kol Aam - (அவை அங்குச்) செல்லக் கூடுமோ? |