| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2509 | திருவிருத்தம் || பொய்கையார் – மாலும் காருங்கடலே என் நோற்றாய் வையகமுன்டு ஆலின் இலைத் துயின்ற ஆழியான் – கோலாக் கரு மேனி செங்கண் மால் கண் படையுள் என்றும் திருமேனி தீண்டப் பெற்று -என்றால் போலே இங்கே மேகங்களே என்ன தவம் புரிந்தீர் 32 | மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி யொக்கும் யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் உயிர் அளிப்பான் மாகங்கள் எல்லாம் திரிந்து நன்னீர் சுமந்து நுந்தம் ஆகங்கள் நோவ வருந்துத்தவ மா மருள் பெற்றதே | மேகங்களே, Megangalai - ஓ மேகங்களே!, திருமால் திருமேனி ஒக்கும் யோகங்கள், Thirumal Thirumeni Okkum Yogangal - எம்பெருமானது திருமேனியை யொத்திருக்கும்படியான உபாயங்களை உங்களுக்கு எவ் ஆறு பெற்றீர், Ungalukk Ev Aaru Pettrir - உங்களுக்கு (ஸித்திக்கும்படி) எவ்விதமாய் அடைந்தீர்கள்? உரையீர், Uraiyeer - சொல்லுங்கள்; உயிர், Uyir - உயிர்களை அளிப்பான், Alippan - பாதுகாக்கும் பொருட்டு நல் நீர்கள் சுமந்து, Nal Neergal Sumandhu - நல்ல ஜலத்தைத் தரித்து மா கங்கள் எல்லாம் திரிந்து, Maa Kangal Ellam Thirinthu - பெரிய வானங்களிலெல்லாம் ஸஞ்சரித்து நும் தம், Num Tham - உங்களுடைய ஆகங்கள் நோவ, Aakangal Nova - உடம்புகள் நோகும்படி வருந்தும், Varundum - (அவ்வுடம்புகளை) வருந்திச் செய்த தவ ஆம், Thava Aam - தபஸ்ஸோ அருள் பெற்றது, Arul Pettrathu - (அவ் வெம்பெருமான) அருளை நீங்கள் பெற்ற காரணம்?. |