Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2510 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2510திருவிருத்தம் || 33
அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் ஈங்கு ஓர் பெண் பால்
பொருளோ எனும் இகழ்வோ? இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
தெருளோம் அரவணையீர் ! இவள் மாமை சிதைக்கின்றதே
அரவு அணையீர், Aravu Anaiyeer - ஆதிசேஷசயனத்தை யுடையவரே!
அருள் ஆர் திரு சக்கரத்தால், Arul Aar Thiru Chakkaraththal - கருணை நிறைந்த திருவாழியைக் கொண்டு
அகல் விசும்பும், Akal Vichumbum - பரந்த விண்ணுலகத்திலும்
நிலனும், Nilanum - மண்ணுலகத்திலும்
இருள் ஆர்வினை கெட, Irul Aarvinai Keda - இருளையொத்த கொடிய தொழில்கள் நிகழாதபடி (துஷ்ட நிக்ரஹஞ் செய்து)
செங்கோல் கடாவுதீர், Chengol Kadaavudheer - உமது கட்டளையைத் தடையன்றிச் செலுத்துகிறீர். (அப்படி லோகங்களை ரக்ஷிக்கிற நீர்)
இவள், Ival - இப்பராங்குச நாயகியினுடைய
மாமை, Maamai - மேனி நிறத்தை
சிதைக்கின்றது, Sithaikkindrathu - அழிப்பதானது
ஈங்கு, Eengu - ‘இவ்வுலகத்தில்
ஓர் பெண்பால், Oor Penpaal - ஒரு பெண்ணைக் காப்பது
பொருளோ எனும், Poruloo Ennum - புருஷோத்தமோ’ என்கிற
இகழ்வோ, Ikazhvo - அவதாரமோ? (அல்லது)
இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ, Ivattrin Puraththal Endru Enno - (உம்மால் ரக்ஷிக்கப்படுகின்ற) விண் மண்ணுலகங்களுக்குஉள்ளாகாமல் வெளியாயிருப்பவளொருத்தியிவள்’ என்ற எண்ணமோ?
தெருளோம், Theruloam - அறிகின்றிலோம்