Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2511 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2511திருவிருத்தம் || 34
சிதைக்கின்ற தாழி என்று ஆழியை சீறி தன் சீர் அடியால்
உதைக்கின்ற நாயகம் தன்னொடு மாலே உனது தண்டார்
ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய்
பதைக்கின்ற மாதின் திறத்து அறியேன் செயற் பால் அதுவே
மாலே, Male - எம்பெருமானே
ஆழி, Aazhi - கூடல் வட்டமானது
சிதைக்கின்றது, Sithaikkindrathu - காரியத்தைக் கெடுக்கின்றது
என்று, Endru - என்ற காரணத்தினால்
ஆழியை, Aazhaiya - அக்கூடல் வட்டத்தை
சீறி, Seeri - கோபித்து
தன் சிறுஅடியால், Than Siruadiyal - தனது சிறிய கால்களால்
உதைக்கின்ற, Uthaikkindra - உதைக்கும் படியான மேம்பாடுடனே
உனது, Unathu - உன்னுடையதான
தண் தார் ததைக்கின்ற, Than Thar Thathaikkindra - வாடாத மலர்கள் நிறைந்த
தண் அம் துழாய், Than Am Thuzhai - குளிர்ந்த அழகிய திருத்துழாயை
அணிவான் அதுவே மனம் ஆய்பதைக்கின்ற, Anivaan Adhuve Manam Aaypathaikkindra - சூடும் பொருட்டு அதிலேயே கருத்தாய் வருந்துகிற
மாதின் திறத்து, Maathin Thirathu - இம்மங்கை விஷயத்தில்
செயல் பாலது, Seyal Paalathu - செய்யததக்கதை
அறியேன், Ariyyeen - யான் அறிகின்றிலேன்.