| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2513 | திருவிருத்தம் || 36 | துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தராது பெயரா எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும் ஈங்கு இவளோ வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கைக் குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே | துழா நெடு சூழ் இருள் என்று, Thuzha Nedhu Soozh Irul Endru - (கண்ணுக்குப் பொருள்கள் புலப்படாமையால் கைகளால்) தடவித் தேடவேண்டும்படியான முடிவில்லாத நிறைந்த இருட் பொழுதென்று (ஒரு பேரிட்டுக் கொண்டு) எழா நெடு ஊழி எழுந்த, Ezha Nedhu Oozhi Ezuntha - (முன்பு ஒருகாலும்) தோன்றியறியாத நீண்ட கல்பம் தோன்றின. இக்காலத்தும், Ikkaalaththum - இச்சமயத்திலும் ஈங்கு இவளோ, Eengu Ivalo - இவ்விடத்துத் தனிமை பொறுக்க மாட்டாதிருக்கிற இவளோ தம் தண் தார் அது பெயர் ஆ, Tham Than Thaar Adhu Peyar Aa - நமது குளிர்ந்த திருத்துழாய் மாலை விஷயமாக (துழாய் மாலை யென்னும் பெயரையே உருவிட்டுச் சொல்லிக்கொண்டு) வழா நெடு துன்பந் தன், Vazha Nedhu Thunban Than - தவறுதலில்லாத மிக்க (முடிவில்லாத) துன்பமுடையவன் என்று, Endru - என்று இவள் நிலைமையைத் திருவுள்ளத்திற்கொண்டு இரங்கார், Irangaar - (தலைவர்) இரக்கங் கொண்டு வந்து அருளுகிறாரில்லை; அம்மனோ, Ammanoo - அந்தோ! இலங்கை, Ilankai - இலங்காபுரியிலுள்ள குழாம், Kuzhaam - கூட்டமான நெடுமாடம், Nedumaadam - பெரிய மாளிகைகளை இடித்த, Iditha - (தம் சேனையைக் கொண்டு இடித்துத் தள்ளின பிரனார், Piranar - தலைவருடைய கொடுமைகளே, Kodumaikaale - கொடுந்தன்மைகள் இருந்தபடி என்னே!. |