| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2514 | திருவிருத்தம் || 37 | கொடும் காற் சிலையர் நிரை கோள் உழவர் கொலையில் வெய்ய கடுங்கா விளைஞர் துடி படுங்கவ் வைத்து அருவினையேன் நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற தொடுங்கால் ஓசியும் இடை இள மான் சென்ற சூழ் கடமே | அரு வினையேன், Aru Vinaiyen - அநுபவிக்க முடியாத தீவினைப் பயனையுடைய யான் நெடு காலமும், Nedu Kaalamum - வெகு காலம் கண்ணன், Kannan - கண்ணபிரானுடைய நீள் மலர் பாதம், Neel Malai Paatham - நீண்ட தாமரை மலற்போன்ற திருவடிகளை பரவி, Paravi - வழிபட்டு பெற்ற, Petra - அந்த ஆராதனையின் பயனாக ஈன்ற தொடுங்கால் ஒசியும் இடை இனமான், Thodungaal Osiyum Idai Inamaan - தொட்டால் ஒடியும்படியான (மிக மெல்லிய) இடையை யுடையவளும்இளமை தங்கிய மான் போன்ற பார்வை யுள்ளவளுமான மகள் சென்ற, Sendra - நடந்துபோன சூழ்கடம், Sozhkadham - பரந்த பாலைநிலம். (எப்படிப்பட்டதென்னில்) கொடு கால் சிலையர், Kodu Kaal Silaiyar - வளைந்த விற்கழுந்தை யுடையவர்களும் நிரை கோள் உழவர், Nirai Kaal Uzavar - பசுக்கூட்டங்களைக் கவர்ந்து கொள்வதையே தொழிலாக வுடையவர்களும் கொலையில் வெய்ய, Kolaiyil Veyya - கொலைத் தொழிலில் கொடியவர்களும் சுடு கால், Sudu Kaal - நடை விரைந்த கால்களை யுடையவர்களுமாகிய இளைஞர், Ilaignar - இளைவீரர்களது துடி, Thudi - பறைகள் படும், Padum - ஒலித்தலாகிற கவ்வைத்து, Kavvaiththu - ஆரவாரமுடையது. |