| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2515 | திருவிருத்தம் || 38 | கடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள் தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தவமிது கொல் குடமாடி யிம் மண்ணும் விண்ணும் குலுங்க வுலகளந்த நடமாடிய பிரான் உரு ஒத்தன நீலங்களே | கடன் ஆயினகள் கழித்து, Kadan Aayinagal Kazhiththu - காடுகளாகவுள்ள வற்றைக் கடந்து ஒழித்து கடம் ஆயின புக்கு, Kadham Aayin Pukku - தடாகங்களாக வுள்ளவற்றில் பிரவேசித்து (அங்கு) தம் கால் வன்மையால், Tham Kaal Vanmaiyaal - தமது கால்களின் வலிமையால் பல நாள், Pala Naal - அனேக காலம் நீர் நிலை நின்ற, Neer Nilai Nindra - நீரிலே நீங்காது நின்று செய்த தவம் இது கொல், Thavam Ithu Kol - இத் தவத்தினாலேயோ நீலங்கள், Neelangal - நீலோற்பல மலர்கள்–கரு நெய்தல்கள் குடம் ஆடி, Kudam Aadi - (கிருஷ்ணாவதாரத்தில்) குடக் கூத்தாடினவனும் (த்ரிவிக்ரமாவதாரத்தில்) இ மண்ணும், I Mannum - இந்த மண்ணுவகமும் விண்ணும், Vinnum - விண்ணுலகமும் குலுங்க, Kulunga - நெகிழும்படி உலகு, Ulaku - உலகங்களை அளந்து, Alandhu - அளவிட்டு நடம் ஆடிய, Nadam Aadiya - (இங்ஙனம்) திருவிளையாடல் செய்தருளினவனுமான பெருமான், Perumaan - எம்பெருமானுடைய உரு ஒத்தன, Uru Oththana - திருமேனி நிறம்போன்ற நிறம் பெற்றன. |