| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2517 | திருவிருத்தம் || 40 | கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய குழாம் விரிந்த நீல கங்குல் களிறு எல்லாம் நிரைந்தன நேரிழையீர் ஞால பொன் மாதின் மணாளன் றுழாய் நாங்கள் குழல் சூழற்க்கே ஏலப் புனைந்து என்னைமார் எம்மை நோக்குவது என்று கொலோ | கோலம், Kolam - அலங்காரத்தையுடைய பகல், Pagal - ஸூர்யனாகிய களிறு ஒன்று, Kaliru Ondru - ஒப்பில்லாததொரு யானை கல் புய்ய, Kal Puyya - அஸ்தமன பர்வதத்தில் மறைய, குழாம் விரிந்த, Kuzham Virindha - திரளாகப் பரந்த நீலம், Neelam - நீலநிறத்தையுடை கங்குல், Gangul - இரவாகிய களிறு எல்லாம், Kaliru Ellam - யானைகளெல்லாம் நிரைந்தன, Niraindhana - அடைவே எதிரில் வந்து சேர்ந்தன. நேர் இழையீர், Ner Izhaiyeer - தகுதியான ஆபரணங்களை யுடையவர்களே! ஞாலம், Njaalam - பூ தேவிக்கும் பொன் மாதின், Pon Maathin - ஸ்ரீ தேவிக்கும் மணாளன், Manaalan - நாயகனான எம்பெருமான் துழாய், Thuzhai - (தனது) திருத்துழாய் மாலையை நங்கள் சூழ் சூழற்கே, Nangal Soozh Soozharkae - எமது அடர்ந்த தலை மயிரிலே ஏல புனைந்து, Aela Punaindhu - தகுதியாகச் சூட்ட என்னைமார், Ennai Maar - எமது தாய்மார் எம்மை நோக்குவது, Emmai Nookkavudhu - என்னைப் பார்ப்பது என்று கொலோ, Endru Koloo - என்றைக்கோ? |