| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2519 | திருவிருத்தம் || 42 | வன்காற் றறைய ஒருங்கே மறிந்து கிடந்தலர்ந்த மென்காற் கமலத் தடம்போற் பொலிந்தன மண்ணும்விண்ணும் என்காற் களவின்மை காண்மினென் பானொத்து வான்நிமிர்ந்த தன்கால்பணிந்த வென்பால் எம்பிரான தடங்கண்களே. | எம் பிரான், Em Piraan - எம்பெருமானுடைய கட கண்கன், Kada Kankan - பெரிய திருக்கண்களானவை (எங்ஙனம் விளங்குகின்றனவென்றால்.) மண்ணும் விண்ணும், Mannum Vinnum - மண்ணுலகமும் விண்ணுலகமுமாகிய விசாலமான இடமிரண்டும் என் காற்கு, En Kaaru - எனது இரண்டு பாதங்களின் அளவுக்கு அளவு இன்னும் காண்மின், Alavu Innum Kaanmin - இடம் போதாத அற்புதத்தை பாருங்கள் என்பான் ஒத்து, Enban Othu - என்று (அந்தந்த உலகங்களிலுள்ளார்க்குக் கூறி) ஒரு வித்தை காட்டுபவன் போன்று வான் நிமிர்ந்த, Vaan Nimirtha - மேலுலகை நோக்கி வளர்ந்த தன், Than - தன்னுடைய கால், Kaal - திருவடிகளை பணிந்த, Panintha - வணங்கின என்பால், Enpal - என்னிடத்து. வன் காற்று அறைய, Van Kaatru Araya - பெருங்காற்று வீசுதலால் ஒருங்கே மறிந்து கிடந்து அலர்ந்த, Orungae Marinthu Kidandhu Alarntha - ஒரு பக்கமாகச் சாய்ந்து கிடந்து மலர்ந்த மென்கால், Menkaal - மெல்லிய நாளத்தையுடைய கமலம் தடம்போல், Kamalum Thadampol - தாமரைத் தடாகம்போல பொலிந்தன, Polinthana - அழகுமிக்கு விளங்கின. |