| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2521 | திருவிருத்தம் || 44 | நியமுயர் கோலமும் பேரும் உருவும் இவையிவையென்று அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலும் அங்கங்கெல்லாம் உறவுயர் ஞானச் சுடர்விளக் காய்நின்ற தன்றியொன்றும் பெறமுயன் றாரில்லை யால்எம்பி ரான்றன் பெரு மையையே. | நிறம், Niram - திருமேனி நிறமும் (- (இவை இவை என்று இனனின்னவையென்று)) உயர் கோலமும், Uyar Kolaum - சிறந்த அலங்காரமும் பேரும், Perum - திருநாமமும் உருவும், Uruvum - வடிவமும் அங்கு அங்கு எல்லாம், Angu Angu Ellam - கீழ்ச்சொன்ன நிறம் அலங்காரம் திருநாமம் வடிவம் இவையெல்லாவற்றிலும் உற உயர் ஞானம் சுடர் விளக்கு ஆய் நின்றது அன்றி, Ura Uyir Nyanam Sudar Vilakku Aay Nindrathu Andri - மிகவுயர்ந்த (தமது) ஞானமாகிற தீபத்தால் சிறிது விளக்கத்தைப் பெற்று நின்ற தொழிய அறம் முயல் ஞானம் சமயிகள் பேசிலும், Aram Muyal Nyanam Samayigal Pesilum - தருமமார்க்கத்தால் முயன்று பெற்ற ஞானத்தையுடைய வைதிக ஸம்ப்ரதாயஸ்தர்கள் (ஒருவாறு பிறர்க்குச்) சொன்னாலும். (அவர்கள்) எம்பிரான் பெருமையை, Embiran Perumaiyai - எம்பெருமானுடைய (ஒப்புயர்வற்ற) மஹிமையை ஒன்றும் பெற முயன்றார் இல்லை, Onrum Per Mudhal Nindrar Illai - ஒருவையாலும் முற்றும் அளவிட்டுக் கூறப்பெறும்படி முயற்சி செய்தார்களில்லை. |